Connect with us

latest news

ஆர்ப்பாட்டம் செய்யும் கோபி.. சண்டையிட்டு கொள்ளும் முத்து, மீனா… பாண்டியனுக்கு பிறந்தநாள்…

VijayTv: சிறகடிக்க ஆசை தொடரில் செல்வம் அவரின் பெற்றோர்களுக்கு அறுபதாம் கல்யாணம் செய்ய காசு இல்லை எனக் கூறி குடித்துவிட்டு அழுது கொண்டிருக்கிறார். அங்கு ஒரு முத்து கேட்ட பின்னர் தான் பணம் தயார் செய்து பெறுவதாக சொல்லிவிட்டு செல்கிறார்.

மனோஜ் தன்னுடைய பாதுகாப்பிற்காக ஆட்களை தேர்வு செய்து கொண்டிருக்கிறார். அப்போ வரும் ஒருவரை பத்தாயிரம் சம்பளத்திற்கு வேலைக்கு எடுக்கிறார். வீட்டுக்கு வரும் முத்து மீனாவிடம் கையில் இருக்கும் ஒரு லட்சம் பணத்தை கேட்கிறார். எதுக்கு என கேட்க செல்வம் கூறிய விஷயத்தை கூறுகிறார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் இவ்வளவுதானா?!… அதிர்ச்சி கொடுக்கும் கோட் படத்தின் வசூல்!..

ஆடம்பரத்துக்கு எல்லாம் எதுவும் செய்யக்கூடாது. நம்ம கைக்கேற்ற வீக்கம் வேணும் என்கிறார். இதில் கடுப்பாகும் முத்து மீனாவிடம் சண்டை இட்டு செல்கிறார். வருத்தத்தில் இருக்கும் மீனா தன்னுடன் பூ கட்டுபவர்களிடம் இதை சொல்லி வருத்தப்படுகிறார். அவர்களும் நீ செய்ததுதான் சரி கவலைப்படாத சண்ட ரெண்டு மூணு நாளா சரியாயிடும் என்கிறார்.

பாக்கியலட்சுமி தொடரில் பொட்டு இல்லாமல் இருக்கும் ஈஸ்வரிக்கு பாக்யா பொட்டு வைத்து விடுகிறார். ரெஸ்டாரன்ட் திறக்க ஆட்களை அனுப்பி செல்வியை சுத்தம் செய்ய சொல்கிறார். எழில் ராமமூர்த்தியின் வீடியோவை எடிட் செய்து வந்து குடும்பத்தினரும் காட்டி சந்தோஷப்பட்டு கொண்டிருக்கிறார்.

வாக்கிங் சென்ற எழில் மற்றும் செழியன் கோபியுடன் அருகில் இருப்பவர்கள் பிரச்சனையைப் பேசி ஏற்றி விட அவர் ஒரு கட்டத்தில் கத்தி சத்தம் போட்டுக் கொண்டிருக்கிறார். எங்க அப்பா சொல்லிட்டு போயிட்டாரு எங்க அம்மா செஞ்சிட்டாங்க இப்போ உங்களுக்கு என்ன எனக் கேட்டு திட்டுகிறார்.

இதையும் படிங்க: சினேகா ரோலில் முதலில் செலக்ட் ஆனவர் நயன்! படத்தை பார்த்துவிட்டு என்ன சொன்னார் தெரியுமா?

அங்கு வரும் செழியன் அவரை சமாதானப்படுத்த போ உங்க அம்மா கிட்டயும் பாட்டி கிட்டயும் சொல்லு நான் அவமானப்பட்டு தலை குனிஞ்சு நின்னதை சொல்லு என்கிறார். காலேஜ் செல்லும் இனியா ராமமூர்த்தியின் சேரை பார்த்து அழுது கொண்டிருக்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 தொடரில் பாண்டியன் பிறந்தநாளில் கோயில் செய்ய வேண்டியதை கோமதி சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்போ வரும் தங்கமயில் இதைக் கேட்டு பெரிய பங்க்ஷனாக நடத்தலாம் என்கிறார். இதைத்தான் அம்மாவிடம் போய் கால் செய்து சொல்ல அவர் அதெல்லாம் வேண்டாம் என்கிறார்.

ராஜி மற்றும் மீனா பேசிக் கொண்டிருக்க மீண்டும் டியூஷன் எடுக்க போகும் விஷயத்தை கூறுகிறார். ஆனால் வீட்டில் சொல்லி மொத்த பேரிடமும் அனுமதி வாங்கிக் கொண்டே செல்வேன் எனக் கூறிவிடுகிறார். அப்போ அங்க வரும் தங்கமயில் பாண்டியன் பிறந்தநாளை கொண்டாடலாமா என கேட்கிறார். இதற்காக ஒப்புக் கொள்வதுடன் இன்றைய எபிசோடுகள் முடிந்தது.

இதையும் படிங்க: ராதிகாவே அட்ஜெஸ்ட்மெண்டுக்கு அனுப்புன செய்தி தெரியுமா? பயில்வான் ரெங்கநாதன் காட்டம்

google news
Continue Reading

More in latest news

To Top