Connect with us
serials

latest news

பணத்தை கொடுத்து சீன் போட்ட விஜயா… இனியாவுக்காக இறங்கி வந்த கோபி… உடைந்த தங்கமயிலின் ரகசியம்!..

VijayTV: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன்2 தொடர்களில் இன்று நடக்க இருக்கும் எபிசோட்களின் தொகுப்புகள்.

சிறகடிக்க ஆசை: பார்வதியை பார்க்கும் ரோகிணி வீட்டில் சண்டையா இருக்கு. இந்த காசை கிடைச்சிட்டதா சொல்லி கொடுங்க என சமாளிக்கிறார். பார்வதியும் நம்பி வாங்கிவிடுகிறார். அண்ணாமலை வேலைக்கு போவதாக சொல்ல விஜயாவும் போகட்டும் என்கிறார். அப்போ வரும் ரோகிணி செயினை விற்றதாக சொல்லி காசை கொடுக்கிறார்.

இதையும் படிங்க: வேள்பாரியை சினிமாவா மாத்த முடியுமா? பிரபல எழுத்தாளர் இயக்குனர் ஷங்கருக்குக் கேள்வி

மனோஜும் அதை வாங்கிக்கொண்டு போய் விஜயாவிடம் கொடுத்து கொடுக்க சொல்கிறார். அண்ணாமலை இதையே ரோகிணியும் அங்கு இருந்தா அவ மேல சொல்லிடுவியா எனக் கேட்கிறார். மீனா அமைதியா இருந்துட்டா இதுவே ஸ்ருதி சும்மா இருப்பாளா எனக் கேட்கிறார். காசை அத்தையிடம் கொடு என முத்து கூற இல்லை டியூ கட்டிக்கோங்க அவங்களுக்கு பின்னால் பார்த்துக்கலாம் என்கிறார்.

பாக்கியலட்சுமி: இனியா வந்துவிட்டு போன விஷயத்தை ராதிகா மற்றும் அவர் அம்மா கோபியிடம் சொல்ல அவர் யோசிக்கிறார். ராதிகாவுக்கு ஆறுதல் சொல்லாமல் இனியாவுக்கு எதோ கஷ்டம் அதை பேசிவிட்டு வருகிறேன் எனச் செல்கிறார். ராதிகா தன்னுடைய வாழ்க்கையை கெடுத்து கொண்டதாக அவர் அம்மாவிடம் சொல்லி அழுகிறார்.

இனியாவை வீட்டில் சந்திக்கும் கோபி வெளியில் அழைத்து செல்கிறார். இதை பார்க்கும் ராதிகாவின் அம்மா பாக்கியா வீட்டுக்கு வந்து சத்தம் போடுகிறார். அவரிடம் ஈஸ்வரி கோபி எங்க வேண்டும் என்றாலும் அழைத்து செல்வான். உனக்கு என்ன கழுத்தை பிடித்து தள்ளுவேன். வெளியில் போ என்கிறார். இதை ராதிகாவிடம் வந்து சொல்லிவிடுகிறார். கோபி மற்றும் இனியா பேசிக்கொண்டு இருக்கின்றனர்.

இதையும் படிங்க: இது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தான்… நடிகருடனான காதலை ஒத்துக்கொண்ட ராஷ்மிகா…

அவரும் வளைத்து வளைத்து போட்டோவாக எடுக்கிறார். அவர் போன் வந்ததாக சென்று விட ராஜிக்கு வேண்டும் என்றால் இதை கொடுங்க என தங்கமயிலின் அம்மா சொல்கிறார். இதனால் தங்கமயில் பயந்து விடுகிறார். கோமதி சென்றுவிட அப்பா, அம்மாவை அழைத்துக்கொண்டு மாடிக்கு செல்கிறார் தங்கமயில்.

நகையை கொடுக்க சொல்றீங்க. இருக்க 80 பவுனில் 8 தான் உண்மை மத்ததெல்லாம் கவரிங்குனு ராஜி கண்டுப்பிடிச்சிடுவா எனக் கூற சரியாக அங்கு ராஜி மற்றும் மீனா வந்துவிடுகின்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த தங்கமயில் அப்பா மற்றும் அம்மா சமாளிக்க பார்க்க மயில் உண்மையை உடைத்து விடுகிறார்.

author avatar
Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in latest news

To Top