Vijay: விஜய் சம்பளம் எல்லாமே கண்கட்டி வித்தை… 50 கோடிதான் ஒரிஜினலாம்… அட அம்மாடி!

Published on: December 5, 2025
---Advertisement---

Vijay: தமிழ் சினிமாவில் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் முதல் நடிகராக விஜய் இருக்கிறார் எனக் கூறப்பட்டு வரும் நிலையில் அதற்குரிய முக்கிய தகவல்கள் தற்போது கோலிவுட்டில் பேசுபொருளாகி இருக்கிறது. 

விஜய் நடிப்பில் கடந்த சில படங்களாகவே ஒவ்வொரு படத்துக்கு 50 கோடி அளவில் சம்பளம் அதிகமாக கொடுக்கப்பட்டு வருகிறது. லியோ படத்தில் 200 கோடி வாங்கியவர். கோட் படத்தில் 250 கோடி வரை சம்பளமாக வாங்கினார் எனக் கூறப்படுகிறது. 

அதை தொடர்ந்து விஜயின் கடைசி படமான ஜனநாயகன் விறுவிறுப்பாக தயாராகி வருகிறது. ஹெச்.வினோத் இயக்கத்தில் இப்படம் கேவிஎன் புரொடக்‌ஷன் நிறுவனம் சார்பில் வரும் ஜனவரி 9ந் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. 

இந்த படத்திற்கு விஜயின் சம்பளம் மட்டுமே 300 கோடி அளவில் கொடுக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் பேசப்பட்டு வருகிறது. மார்க்கெட்டில் விஜயின் படங்களுக்கு மவுசு அதிகம் என்பது உண்மைதான். வசூலிலும் படம் பெரிய அளவில் 600 கோடியை தாண்டினால் கூட ஒரு ஹீரோவுக்கு எப்படி இத்தனை சம்பள உயர்வு கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. 

அந்த வகையில் விஜயின் சம்பளம் அடங்கிய ஒரு ஆச்சரிய உண்மை கசிந்து இருக்கிறது. சர்க்கார் படத்தில் விஜயின் சம்பளம் 35 கோடியாக இருந்தது. பிகில் படத்தில் விஜயின் சம்பளம் 50 கோடியாக இருந்தது. ஆனால் அதை தொடர்ந்து மாஸ்டர் படத்தில் அப்படியே இரண்டு மடங்காக 100 கோடிக்கு சம்பளம் உயர்த்தப்பட்டது. 

Vijay: விஜய் சம்பளம் எல்லாமே கண்கட்டி வித்தை… 50 கோடிதான் ஒரிஜினலாம்… அட அம்மாடி!
vijay

அந்த படத்தினை தயாரித்தவர் விஜயின் சொந்த மேனேஜர் ஜெகதீஷ் பழனிசாமி. விஜய் தன்னுடைய சொந்த காசை வைத்து மேனேஜரை தயாரிப்பாளராக மாற்றிவிட்டார். தனக்கே 100 கோடி சம்பளத்தையும் கொடுத்து கொண்டார். 

தொடர்ந்து, கலாநிதி மாறன் தயாரிப்பில் வெளியான பீஸ்ட் படத்திற்கும் 100 கோடி சம்பளமே கொடுக்கப்பட்டது. ஆனால் வாரிசு படத்திற்கு 110 கோடி வரை மட்டுமே சம்பளமாக கொடுக்கப்பட்டதாம். தன்னுடைய மேனேஜரை வைத்து ஏற்றிய சம்பளம் மற்ற தயாரிப்பாளர்களால் ஏற்றப்படவே இல்லை. 

இதை தொடர்ந்து, லியோ படத்தில் 150 கோடியாக சம்பளத்தை உயர்த்தினார். அப்படத்திலும் தன்னுடைய தயாரிப்பாளராக மேனேஜர் ஜெகதீஷுக்கு பொறுப்பு கொடுத்தார். படத்தின் லாபத்திலும் பெரிய பங்கு எடுத்துக்கொண்டார். 

படத்திற்கு இருந்த பெரிய எதிர்பார்ப்பு லாபத்தை அதிகரிக்க செய்தது. இதனை பயன்படுத்திக்கொண்டு கோட் படத்தில் 250 கோடி வரை சம்பளமாக வாங்கினார் எனக் கூறப்படுகிறது. இப்படி சம்பளத்திலே ஏகப்பட்ட பித்தலாட்டம் செய்துவிட்டு நீங்க பேசலாமா என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். 

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment