Connect with us
vani

Cinema News

பிக்பாஸ் வீட்டுக்குள்ள போனா முதல் வேலையா ஓங்கி ஒரு அறைதான்! வனிதா சொன்ன அந்த போட்டியாளர்

BiggBoss: விஜய் டிவியில் விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கும் ஒரு ரியாலிட்டி ஷோவாக இருப்பது பிக்பாஸ். ஏழாவது சீசனில் வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருக்கும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி இப்போது இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது.

கடந்த ஆறு சீசன்களை விட இந்த சீசன் மக்கள் மத்தியில் வரவேற்பையும் அதே அளவுக்கு எரிச்சலையும் சம்பாதித்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இந்த சீசனில் சொல்லும்படியான அளவுக்கு எந்த கேமும் இல்லாமல் ஆங்காங்கே போட்டியாளர்கள் புரணியைத்தான் பேசிக் கொண்டிருப்பதை போல் தோன்றுகிறது.

இதையும் படிங்க: அந்த பாடல் வரிகளை நான் பாட முடியாது.. அடம் பிடித்த இளையராஜா.. கடைசியில் அந்த பாட்டு ஹிட்டாம்..!

அதுவும் இந்த வாரம் சொல்லவே வேணாம். குடும்பங்கள் கொண்டாடும் வாரமாக இருப்பதால் போட்டியாளர்களின் ஒவ்வொரு ஃபேமிலியும் பிக்பாஸ் வீட்டிற்குள் எண்டிரியாகிக் கொண்டிருக்கின்றனர். அதனால் எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை மாதிரி பாசக்கயிறுகளை போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

நேற்று ரவீனாவின் ஃபேமிலி வீட்டிற்குள் வந்தனர். வந்ததே சரி என ரவீனாவை ஒரு காட்டம் காட்டி விட்டார் ரவீனாவின் ஆண்டி. அவர் அம்மா வரவில்லையா என்று கேட்டதற்கு அவருக்கு உடல் நிலை சரியில்லை அதனால் வரவில்லை என்று சமாளித்து விட்டனர்.

இதையும் படிங்க: எப்பா இது உலகமகா நடிப்புடா சாமி! நடக்காதுனு தெரிஞ்சு சொல்றது எவ்ளோ புத்திசாலித்தனம் – விஜயை விளாசும் தயாரிப்பாளர்

ஆனால் உண்மையிலேயே ரவீனாவின் அம்மாவுக்கு ரவீனா மீது கண்டிப்பாக கோபம் இருந்திருக்க வேண்டும்.வந்திருந்த ஆண்டிக்கே அவ்ளோ கோபம் என்றால் அவரது அம்மாவுக்கு சொல்லவா வேண்டும்? இந்த நிலையில் நடிகை வனிதா ஒரு பேட்டியில் ரவீனாவை பற்றி குறிப்பிட்டிருக்கிறார்.

ஒரு வேளை நான் மட்டும் ரவீனாவின் அம்மாவாக இருந்திருந்தால் ஸ்டிரெச்சர்லாயவது போய் ரவீனாவை ஓங்கி அறைந்திருப்பேன் என்று காட்டமாக பேசியிருக்கிறார். அந்த பேட்டிதான் இப்போது இணையத்தில் வைரலாகின்றது.

இதையும் படிங்க: மன்சூர் அலிகானுக்கு பொடணியில் போட்டு அனுப்பிய நீதிமன்றம் .. அபராதம் இவ்வளவு பெரிய தொகையாம்…!

google news
Continue Reading

More in Cinema News

To Top