கமலின் புது படத்தில் சூர்யாவா?.. விஜய் சேதுபதியா?!.. ஒரு செம அப்டேட்!...
Kamalhaasan: விக்ரம் படத்தின் வெற்றிக்கு பின் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சுறுசுறுப்பாக இயங்க துவங்கிவிட்டது. தொடர்ந்து புதிய படங்களை தயாரிப்பதாக அறிவிப்புகள் வெளிவந்தது. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக ஒரு படமும், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படமும் அறிவித்தார்கள்.
இதில், சிவகார்த்திகேயன் படம் மட்டுமே அமரனாக உருவாகி சூப்பர் ஹிட் அடித்து 300 கோடி வரை வசூல் செய்தது. ஆனால், தேசிங்கு பெரியசாமி - சிம்பு படம் டேக் ஆப் ஆகவில்லை. பல மாதங்கள் பட வேலைகள் நடந்தும் படப்பிடிப்பு துவங்கப்படவில்லை. இது ஒரு சரித்திர கதை என்பதால் அதிக பட்ஜெட் தேவைப்பட்டது.
ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் அதற்கு ஒப்புக்கொண்டாலும் ஓடிடி நிறுவனங்கள் திடீரென புதிய படங்களுக்கு கொடுக்கப்படும் விலையை குறைத்ததால் அந்த படத்திலிருந்து விலகியது. அதேநேரம், மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்த தக் லைப் படத்தில் சிம்பு நடித்தார்.
சமீபத்தில் வெளியான தக் லைப் படம் நெகட்டிவான விமர்சனங்களை பெற்றது. எனவே, படம் வெளியான அடுத்த நாளே பல தியேட்டர்களிலும் காத்து வாங்கியது. ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்துக்கு தக் லைப் படம் வெற்றிப்படமாக அமையவில்லை. அதேநேரம், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் அடுத்த பட வேலைகளை துவங்கிவிட்டது.
இந்நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை சித்தா, வீர தீர சூரன் போன்ற படங்களை இயக்கிய அருண் குமார் இயக்கவுள்ளார். இந்த படத்தில் சூர்யா அல்லது விஜய் சேதுபதி இருவரில் ஒருவரை நடிக்க வைக்கலாம் என்கிற எண்ணம் இருக்கிறதாம். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த விக்ரம் படத்தில் இவர்கள் இருவருமே நடித்திருக்கிறார்கள். எனவே, இவர்களில் ஒருவர் நடிக்க வாய்ப்பிருக்கிறது.
வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கவிருந்த வாடிவாசல் படம் டிராப் ஆகிவிட்ட நிலையில் சூர்யா இந்த படத்தில் நடிக்க வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது. விரைவில் இப்படம் பற்றிய புதிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பர்க்கப்படுகிறது.