இப்படித்தான் சொன்னேன்.. 24 மணி நேரம் கெடு விதித்த நிலையில் வைரலாகும் கமலின் பதிவு

By :  ROHINI
Published On 2025-06-03 13:30 IST   |   Updated On 2025-06-03 13:30:00 IST

kamal

கமல் பேசிய பேச்சுக்கு கன்னட அமைப்பு கவுன்சில் 24 மணி நேரம் கெடு விதித்துள்ளது. தக் லைப் திரைப்படத்தின் ஆடியோ விழாவில் தமிழிலிருந்து பிறந்தது தான் கன்னட மொழி எனக் கூறி மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தினார் கமல். இதற்கு ஒட்டுமொத்த கன்னட அமைப்பினரும் கமலுக்கு எதிராக போர் கொடி தூக்கினர். அதற்கு கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறி வந்தார்கள்.

அப்படி மன்னிப்பு கேட்காவிடில் அவருடைய நடிப்பில் வரும் ஐந்தாம் தேதி வெளியாக கூடிய தக் லைஃப் திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிட விட மாட்டோம் என்றும் கூறினார்கள். ஆனால் கமல் தரப்பிலிருந்து மன்னிப்பு கேட்க முடியாது என்றெல்லாம் சொல்லப்பட்டது .இதற்கிடையில் தான் இன்னும் 24 மணி நேரத்திற்குள் கமல் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிடில் படத்தை வெளியிட தடை விதிப்போம் எனக்கெடு விதித்திருக்கிறது.

இந்த நிலையில் கமல் பேசிய ஒரு தகவல் இப்போது வைரலாகி வருகின்றது. அதில் அன்று நான் பேசியது தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. நாம் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று தான் நான் அப்படி பேசினேன் .கன்னட மொழி ஒரு வளமான மொழி. தமிழ் மொழியை போல கன்னட மொழிக்கும் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்திலும் மிகவும் வளமான மொழி கன்னட மொழி எனக் கூறி இருக்கிறார் கமல்.

அதனால் ஐந்தாம் தேதி கர்நாடகாவில் இந்த படம் வெளியாகுமா வெளியாகதா என இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்து விடும். மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம். முதன்முறையாக சிம்பு கமல் காம்போவில் இந்த படம் தயாராகி இருக்கிறது.

kamal

இதுவே படத்திற்கு கூடுதல் ஹைப். நாயகன் படத்திற்கு பிறகு மணிரத்தினம் கமல் இணையும் திரைப்படமாகவும் இது இருப்பதினால் படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அதற்குள் அன்று அவர் பேசிய அந்த ஒரு பேச்சு இந்த படத்தின் ரிலீஸ்க்கே தடையாக மாறி இருக்கிறது.

Tags:    

Similar News