லாரன்ஸ் நடிக்குறதா சொன்னாரே! ஏன் நடிக்கல? படைத்தலைவன் குறித்து இயக்குனர் சொன்ன தகவல்
sanmugapandian
விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் படைத்தலைவன். விஜயகாந்த் இருக்கும் பொழுதே இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டது. இடையில் விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாமல் போன காரணத்தால் சண்முக பாண்டியன் தொடர்ந்து இந்த படத்தில் நடிக்க முடியாமல் அந்த படம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது.
இப்படி இருக்கும் சூழ்நிலையில் தான் நேற்று இந்த படம் வெளியானது. படம் வெளியாகி நல்ல ஒரு வரவேற்பை பெற்று வருகிறது. படத்தில் விஜயகாந்தை ஏஐ மூலமாக கொண்டு வந்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல பொட்டு வச்ச தங்க குடம் பாடலையும் இந்த படத்தில் பயன்படுத்தி இருக்கிறார்கள் .இதுவே விஜயகாந்த் ரசிகர்களுக்கு ஒரு பெரிய விருந்து வைத்த மாதிரி இருந்தது.
படத்தை விஜயகாந்த் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் விஜயகாந்த் இறப்புக்கு பிறகு லாரன்ஸ் ஒரு வாக்குறுதி அளித்திருந்தார். சண்முக பாண்டியன் நடிக்கும் படத்தில் நான் ஒரு கேமியோ ரோலில் நடிக்க தயார் எனக் கூறியிருந்தார். அது இந்த படத்தில் தான் என செய்தி வெளியானது. ஆனால் ஏன் படைத்தலைவன் படத்தில் லாரன்ஸ் நடிக்கவில்லை என இந்த படத்தின் இயக்குனரிடம் கேட்டபோது படத்தின் இறுதியில் தான் லாரன்ஸ் வந்தார்.
அவரை வைத்து எடுக்கலாம் என்று தான் நினைத்தோம் .ஆனால் கால்ஷீட் பிரச்சனையால் நடிக்க முடியாமல் போய்விட்டது. ஆனால் வேறொரு படத்தில் லாரன்ஸ் கண்டிப்பாக நடிக்கிறேன் என கூறி இருப்பதாக இந்த படத்தின் இயக்குனர் தெரிவித்திருக்கிறார். இதற்கு அடுத்தபடியாக சண்முக பாண்டியன் கொம்பு சீவி என்ற படத்தில் நடித்து வருகிறார். ஏ ஆர் முருகதாஸும் சண்முக பாண்டியன் வைத்து ரமணா 2 திரைப்படத்தை பண்ண தயாராக இருக்கிறேன் என்றும் கூறினார் .அதனால் அடுத்தடுத்து சண்முக பாண்டியன் நடிப்பில் தொடர்ந்து படங்களை பார்க்கலாம்.