பிரியங்காவை நாட்டை விட்டே அனுப்பிய மணிமேக்லை!.. இப்ப எங்க இருக்காங்கன்னு தெரியுமா?

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் பிரச்சனை காரணமாக பிரியங்கா இப்போது எங்க இருக்காங்கன்னு தெரியுமா

By :  rohini
Update: 2024-09-24 04:15 GMT

மணிமேக லை

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி நிகழ்ச்சி. நான்கு சீசன்களை கடந்து இப்போது ஐந்தாவது சீசனில் பயணித்து வருகிறது. இந்த சீசனில் செஃப் தாமோதரன் மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் நடுவர்களாக இருந்து வருகிறார்கள். தொகுப்பாளர்களாக ரக்ஷ்ன் மற்றும் மணிமேகலை இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தனர்.

ஆனால் இப்போது மணிமேகலை இந்த சீசனில் இருந்து விலகி இருக்கிறார். பிரபல தொகுப்பாளினி பிரியங்கா தன்னுடைய வேலையை செய்ய விடாமல் தடுப்பதும் எல்லா வகைகளிலும் அவர் டாமினென்ட் செய்வதுமாக இருப்பதனால் என்னுடைய சுயமரியாதை பாதிக்கப்படுகிறது. அதனால் நான் இந்த நிகழ்ச்சியை விட்டே விலகுகிறேன் என திடீர் அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தார் மணிமேகலை.

மணிமேகலையின் இந்த அறிக்கைக்கு பிறகு சமூக வலைதளங்களில் செல்ப் ரெஸ்பெக்ட் என்ற பெயரில்  ஹேஸ் டாக்கை ஆரம்பித்து மணிமேகலைக்கு ஆதரவாகவும் பிரியங்காவுக்கு எதிராகவும் தங்களது விமர்சனங்களை கூறி வந்தார்கள். ஒரு கட்டத்தில் பிரியங்காவை டார்கெட் செய்து பல ரசிகர்கள் பல வகைகளில் பேசி வந்தார்கள்.

அதன் பிறகு தான் பிரியங்காவுக்கு ஆதரவாக விஜய் டிவியின் சில பிரபலங்கள் பிரியங்கா அந்த மாதிரி கிடையாது. எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற குணம் படைத்தவர். இன்னொருவர் வேலையை தான் கெடுக்க வேண்டும் என்றெல்லாம் நினைக்க மாட்டார். இன்னொருவரின் வெற்றிக்கு காரணமாக இருந்திருக்கிறாரே தவிர அவரால் யாருமே இதுவரை கெட்டுப்போனது இல்லை என்ற வகைகளில் பிரியங்காவுக்கு சப்போர்ட்டாக அந்தப் பிரபலங்கள் கூறினார்கள்.

இந்த நிலையில் பிரியங்கா இப்போது அயர்லாந்தில் இருப்பதாக வனிதா விஜயகுமார் நேற்று நடந்த ஒரு சினிமா விழாவில் பத்திரிக்கையாளர்களிடம் கூறியிருக்கிறார். அது மட்டுமல்ல மணிமேகலைக்கும் பிரியங்காவுக்கும் நடக்கும் அந்த சுயமரியாதை பற்றியும் அவர் பேசியிருக்கிறார். அதாவது இவர்கள் பிரச்சினையில் சில பேர் 'கணவன் கூட இருந்தால் சுயமரியாதை இருக்கும். கணவன் விட்டுப் போனதால் அவர்களுக்கு சுயமரியாதை என்பதை பற்றி தெரியவில்லை' என ரசிகர்கள் கூறி வருவதை நான் கடுமையாக எதிர்க்கிறேன் என வனிதா விஜயகுமார் கூறினார்.

மேலும் பிரியங்காவிடம் நான் பேசினேன். அந்த பொண்ணு பாவம் இதைப் பற்றி ரொம்ப அழுது ஃபீல் பண்ணினா. இப்போது பிரியங்கா அயர்லாந்தில் இருக்கிறாள். ஒரு ஷோவில் தொடர்ந்து இருக்கும் போது அந்த ஷோ முடிந்த பிறகு நம்முடைய ரிலாக்சேஷனுக்காக வெளிநாடு செல்வது வழக்கம். அந்த மாதிரி தான் இப்போது பிரியங்கா அயர்லாந்து சென்று இருக்கிறார். ஆனால் இதையும் சில பேர் பிரியங்கா இந்த பிரச்சினையால் ஓடி ஒளிந்து கொண்டார் எனக் கூறுகிறார்கள். அப்படி இல்லை. அவர் மன நிம்மதிக்காக தான் அயர்லாந்து சென்றிருக்கிறார் என வனிதா விஜயகுமார் கூறினார்.

Tags:    

Similar News