விஜயை விட அதிக சம்பளம் தந்தா தான் நடிப்பேன்... அடம்பிடித்தாரா ரஜினி?

By :  SANKARAN
Published On 2025-07-02 12:30 IST   |   Updated On 2025-07-02 12:35:00 IST

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இந்த வயதிலும் 30 வயது இளைஞன் மாதிரி சுறுசுறுப்பாக நடித்து வருகிறார். அவரது அடுத்தடுத்த அப்டேட்கள் மற்றும் சம்பள விவகாரம் குறித்து மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு என்ன சொல்றாருன்னு பாருங்க.

ஜெயிலர் 2 படத்துக்கு 250 கோடி சம்பளம் வேணும்னு ரஜினி கோரிக்கை வைத்தாராம். அதுவும் விஜயைத் தாண்டி எனக்கு சம்பளம் வேணும்னு சொன்னாராம். ரஜினி தன்னைச்சுற்றி என்ன நடக்குது? யார் என்ன பண்றா? டப்பிங் எப்படி நடக்குதுன்னு பம்பரமா 360 டிகிரியில் சுற்றிக்கிட்டு இருக்கிறார்.

விஜய் இப்போது தனது கடைசி படமாக ஜனநாயகனில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் வரும் 2026 பொங்கலுக்கு வருகிறது. அதே போல ரஜினி தற்போது நடித்து முடித்துள்ள படம் கூலி. இது வரும் ஆகஸ்டு 14ல் திரைக்கு வருகிறது.

கூலியில் 130 கோடி தான் ரஜினிக்கு சம்பளமா பேசிருக்காங்களாம். ஆனால் ஜெயிலர்ல எப்படி ரஜினி 250 கோடி கேட்டாருன்னு விசாரித்தால் அது எல்லாம் பொய் தானாம். விஜய் ஒரு பக்கம் அரசியல பார்த்துக்கிட்டு இருக்காரு. இவரு ஒரு பக்கம் நடிச்சிக்கிட்டு இருக்காரு. சோஷியல் மீடியாவுல உட்கார்ந்து கொண்டு ஏதாவது ஒண்ணைப் பேசிக்கிட்டு இருக்காங்க.


வேற ஒண்ணும் இதுல இல்லை. ஒருமுறை சம்பள விஷயத்தில் ரஜினி எப்போதுமே கறார் காட்டியது இல்லை. அவர் கவிதாலயா கிட்டயே ரஜினி சம்பளத்தில் ஒன்றரை லட்சத்தை திருப்பிக் கொடுத்தவர். ஏன்னா ஏவிஎம்.சரவணன் ஒரு முறை இன்னைக்கு உங்க மார்க்கெட்டுக்கு ஏற்ப 12.5லட்சம் சம்பளம் போட்டுருக்கோம்னு சொன்னாராம்.

அப்படி பார்க்கும்போது கவிதாலயா 14 லட்சம் சம்பளம் பேசினாங்களாம். அதனால ரஜினிக்கு நமக்கு ஏன் ஒன்றரை லட்சம் அதிகமா தாராங்க? தேவையில்லை அந்தப் பணம்னு அப்படியே திருப்பிக் கொடுத்தாராம். அப்படி இருக்க இப்போ மட்டும் எப்படி விஜயை விட எனக்கு அதிக சம்பளம் தந்தால்தான் நடிப்பேன்னு சொல்வார் என்று கேட்கிறார் செய்யாறு பாலு.

Tags:    

Similar News