கோரிக்கை வைக்கச் சென்ற இயக்குனர் ..! 'நோ' சொல்லி திருப்பி அனுப்பிய ஜெயலலிதா
தமிழ்த்திரை உலகில் சூப்பர்ஹிட் படங்களை இயக்கியவர் விக்ரமன். சரத்குமார் நடித்து சூப்பர்டூப்பர் ஹிட்டான் சூர்யவம்சத்தை இயக்கியவர் இவர்தான். இவரது படங்களில் உணர்வுப்பூர்வமான காட்சிகள் நெஞ்சைத் தொடும் வகையில் இருக்கும். 1990ல் புதுவசந்தம் படத்தின் மூலமாக தமிழ்த்திரை உலகில் இயக்குனராக அறிமுகம் ஆனார்.
பூவே உனக்காக: படத்தின் பாடல்களும், கதையும் சூப்பராக இருந்ததால் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. தொடர்ந்து அவரது படமான கோகுலம், நான் பேச நினைப்பதெல்லாம் படங்கள் ஹிட் அடித்தன. 1996ல் விஜய் நடித்த பூவே உனக்காக படத்தை இயக்கினார்.
சூர்ய வம்சம், வானத்தைப் போல: அது விஜயின் திரை உலக வாழ்க்கையில் ஒரு மைல் கல்லாக அமைந்தது. படத்தைப் பாராட்டாதவர்களே இல்லை எனலாம். தொடர்;ந்து வந்த படம்தான் சூர்ய வம்சம். அதன்பிறகு உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், வானத்தைப் போலன்னு ஹாட்ரிக் வெற்றியைக் கொடுத்தார். விஜயகாந்த் நடித்த வானத்தைப் போல படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
ஜெயலலிதா: ஹீரோ யாருன்னு கேட்டுப் படம் பார்க்க போகும் ரசிகர்கள் டைரக்டர் யாருன்னு கேட்பாங்க. அப்படி அவங்களோட சாய்ஸ் பாரதிராஜா, பாலசந்தர், ஸ்ரீதர், பாலுமகேந்திரான்னு பெரிய இயக்குனர்களாகத் தான் இருக்கும். அந்த லிஸ்டில் இயக்குனர் விக்ரமனும் சேர்ந்து கொண்டார். அந்த வகையில் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவை சந்தித்து ஒரு கோரிக்கை வைக்கச் சென்றார் இயக்குனர் விக்ரமன். அதற்கு ஜெயலலிதா என்ன சொன்னார்னு அவரே சொல்றார் பாருங்க.
கோரிக்கை: நான் டைரக்டர்ஸ் யூனியன் தலைவராக இருக்கும்போது ஜெயலலிதா மேடமை பார்க்குற வாய்ப்பு கிடைத்தது. அப்போ அவங்க கிட்ட எங்க யூனியன்ல சில கோரிக்கைகள் இருக்கு. அதைச் சொல்லலாமான்னு கேட்டேன். அவங்களும் தாராளமா சொல்லலாம்னு சொன்னார். நான் ஒவ்வொரு கோரிக்கையா சொல்லிக்கிட்டு இருந்தேன்.
ஆர்டர் போட்டதே நான்தான்: அப்போது கோவில்களில் முன்னாடி சினிமா காட்சிகளை நல்லா எடுப்போம். ஆனா இப்போ எந்த கோயில்லயும் சினிமா எடுப்பதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. அதைக் கொஞ்சம் தளர்வு பண்ணலாமான்னு கேட்டேன். அது மட்டும் கேட்காதீங்க மிஸ்டர் விக்ரமன். கோவில்களில் சினிமா எடுக்கக்கூடாதுன்னு ஆர்டர் போட்டதே நான்தான். நானும் சினிமாவில் இருந்திருக்கேன் என்று தெரியாதா? கோயில் மட்டும் கேட்காதீங்க. அப்படின்னு சொல்லிட்டாங்க என்கிறார் விக்ரமன்.