பாடகியிடம் லாக் ஆன ஜெயம் ரவி!.. குழந்தைகளையும் மறக்கிற அளவுக்கு என்னதான் நடந்தது?..

JayamRavi: தமிழ் சினிமாவில் விவாகரத்து பிரச்சனைகள் தொடர்ந்து நடந்த வண்ணம் இருக்கின்றன. ஜிவி பிரகாஷ் சைந்தவி ,தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இப்போது அவர்கள் வரிசையில் ஜெயம் ரவி ஆர்த்தி என ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. இந்த விவாகரத்து பிரச்சனை தன்னுடைய நடிகனை ஒரு உயர்ந்த அந்தஸ்தில் பார்த்த ரசிகர்களுக்கு இந்த மாதிரி பிரச்சனைகள் வரும் பொழுது ரசிகர்களின் மனதும் சேர்ந்து புண்படுகிறது என்பதை கொஞ்சம் கூட நடிகர்கள் யோசிப்பதில்லை. இந்த நிலையில் ஆரம்பத்தில் இருந்து ஜெயம் ரவிக்கும் […]

By :  Rohini
Update: 2024-09-18 23:10 GMT

jayamravi

JayamRavi: தமிழ் சினிமாவில் விவாகரத்து பிரச்சனைகள் தொடர்ந்து நடந்த வண்ணம் இருக்கின்றன. ஜிவி பிரகாஷ் சைந்தவி ,தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இப்போது அவர்கள் வரிசையில் ஜெயம் ரவி ஆர்த்தி என ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. இந்த விவாகரத்து பிரச்சனை தன்னுடைய நடிகனை ஒரு உயர்ந்த அந்தஸ்தில் பார்த்த ரசிகர்களுக்கு இந்த மாதிரி பிரச்சனைகள் வரும் பொழுது ரசிகர்களின் மனதும் சேர்ந்து புண்படுகிறது என்பதை கொஞ்சம் கூட நடிகர்கள் யோசிப்பதில்லை.

இந்த நிலையில் ஆரம்பத்தில் இருந்து ஜெயம் ரவிக்கும் ஆத்திக்கும் இடையே சிறு சிறு பிரச்சனைகள் இருந்து கொண்டு வந்தன. ஜெயம் ரவியின் சமீப கால படங்களை அவருடைய மாமியார் சுஜாதா விஜயக்குமார் தான் தயாரித்து வெளியிட்டார். பட பிரச்சனைகள் தொடர்பாக ஆர்த்திக்கும் ஜெயம் ரவிக்கும் இடையே பிரச்சனைகள் இருந்ததாக கூறப்பட்டது.

ஆனால் இப்போது இவர்கள் வாழ்க்கையில் ஒரு பாடகி உள்ளே நுழைந்து இருப்பது பெரிய பூதாகரமாக கிளம்பி இருக்கிறது. இந்த பிரச்சனை முதலில் வெளியானதும் ஆர்த்தி மீதுதான் அனைவரும் கோபப்பட்டார்கள். ஏனெனில் ஜெயம் ரவியை தன் பக்கத்து வீட்டு பையன் தன் சகோதரர் என தனக்கு நெருக்கமானவராக தான் ரசிகர்கள் பார்த்து வந்தனர்.

இதையும் படிங்க: கோவாவில் பாடகியுடன் மூணு மாசமா இருந்த ஜெயம் ரவி… என்ன காரணம்னு தெரியுதா?

அதனால் அவர் மீது தவறு இருக்காது என்ற கோணத்தில் தான் ஜெயம் ரவியை தவறாக நினைக்காமல் ஆர்த்தி மீதுதான் தவறு இருக்கும் என நினைத்து வந்தார்கள். இந்த நிலையில் நானும் ஆர்த்தியும் விவாகரத்து செய்யப் போகிறோம் என ஜெயம் ரவி அறிக்கை விட்டதும் ஆர்த்தியின் தரப்பிலிருந்து ஒரு அறிக்கை வெளியானது. அதிலிருந்து தான் ரசிகர்களுக்கு அதிர்ச்சி. ஏனெனில் அந்த அறிக்கையில் ஜெயம் ரவியை ரீச் பண்ணவே முடியவில்லை.

நானும் என்னுடைய இரண்டு குழந்தைகளும் தனியாக கஷ்டப்படுகிறோம். அவருடன் சேர்ந்து வாழ ஆசைப்படுகிறேன் என்பது மாதிரி கூறியிருந்தார் ஆர்த்தி. அப்போ என்னதான் இவர்களுக்குள் பிரச்சனை என விசாரித்த போது தான் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல பாப் பாடகி கெனிஷாவுக்கும் ஜெயம் ரவிக்கும் ஏதோ தொடர்பு இருப்பதாகவும் பெங்களூரில் கெனிஷா இருப்பதால் அடிக்கடி அவரை சந்திக்க ஜெயம் ரவி பெங்களூர் செல்வதாகவும் கூறப்பட்டது.

ஆரம்பத்தில் ஜெயம் ரவிக்கும் ஆர்த்திக்கும் பிரச்சனை இருக்கும்போது ஜெயம் ரவி கோவாவிற்கு சென்று அங்கு கெனிஷாவுடன் தங்கி இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதில் இன்னொரு விஷயம் என்னவெனில் ஜெயம் ரவி பெங்களூர் வரை அவருடைய காரிலேயே தான் போயிருக்கிறார். அந்த காரை கெனிஷா ஓட்ட விதிமுறைக்கு மீறாக அந்த காரில் சன் கிளாஸ் பொருத்தப்பட்டிருந்ததால் அந்த காருக்கு பைன் போடப்பட்டிருக்கிறது.

இதையும் படிங்க: ரஜினி படத்துல ஓபனிங் சாங்… கமல் பாடுவதற்கு வாய்ப்பு?

கூடவே அந்த காரை ஓட்டியவரின் லைசன்ஸ் ஸ்கேன் செய்யப்பட்டு அந்தக் கார் யார் நம்பரில் புக் செய்யப்பட்டு இருந்ததோ அந்த நம்பருக்கு ரசீது சென்று இருக்கிறது. அதுதான் ஆர்த்தி நம்பர் .அதிலிருந்து தான் ஆர்த்திக்கு ஜெயம் ரவியின் மீது சந்தேகம் ஏற்பட்டு இருக்கிறது. ஜெயம் ரவியும் பெங்களூரில் தான் இருக்கிறார். ஆனால் காரை ஓட்டியவர் கெனிஷா. இவரும் பெங்களூரில் தான் இருக்கிறார் என ஆர்த்திக்கு சந்தேகம் வந்திருக்கிறது.

ஜெயம் ரவியை பார்க்க ஆர்த்தி எவ்வளவு முறை முயற்சி பண்ணியும் பார்க்க அனுமதிக்கவே இல்லையாம். தனது திருமண நாளுக்கும் வரவில்லை. அவருடைய பிறந்த நாளுக்கும் வரவில்லை. ஆனால் இங்கே ஜெயம் ரவியின் பிள்ளைகள் கண்டிப்பாக பிறந்தநாளுக்கு அப்பா வந்து விடுவார் என்று நம்பிக்கையுடன் காத்திருந்தார்கள் .ஆனால் ஒரு போன் செய்து கூட அப்பா ஷூட்டிங்கில் இருக்கேன் என்று கூட ஜெயம் ரவி சொல்லவில்லை .

அந்த அளவுக்கு தன்னையும் மறந்து தன்னை சுற்றி இருக்கிறவர்களையும் மறந்து இருக்க ஜெயம் ரவிக்கு என்னதான் நடந்தது என அனைவரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கு மேலாக கெனிஷா ஆன்மீக ரீதியாக பல விஷயங்களை செய்யக்கூடியவர் என்றும் சொல்கிறார்கள். அதனால் ஜெயம் ரவியை ஏதாவது மாந்திரீகம் போன்ற விஷயங்களில் ஈடுபடுத்தி அவருடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறாரா என்றும் தெரியவில்லை.

இதையும் படிங்க: கோலிவுட்டின் முதல் ஹீரோ அஜித்தான்! மதுபாலா சொன்ன விஷயம் என்ன தெரியுமா?

பிரதர் திரைப்படம் வரும் அக்டோபர் 31ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் அந்தப் படத்தின் டப்பிங் பேசக்கூட ஜெயம் ரவி வரவில்லையாம். பட குழுவால் கூட அவரை ரீச் பண்ண முடியாத சூழ்நிலையில் இருக்கிறார்களாம். அந்த அளவுக்கு லாக் செய்யப்பட்டிருக்கிறார் ஜெயம் ரவி. இதனால் அவருடைய குடும்பம் ஒரு பக்கம் பாதிக்கப்பட்டாலும் இன்னொரு பக்கம் அவருடைய டோட்டல் கெரியரும் பாதிக்கப்பட்டு வருகிறது.

அவரை நம்பி பணம் போட்டவர்கள் எப்படி படம் எடுப்பார்கள்? இன்னொரு பக்கம் அவர் நடிப்பில் ரிலீசாக கூடிய திரைப்படங்களை பார்க்க வரும் ஆடியன்ஸ்சும் படத்தை பார்க்கும் பொழுது அவருடைய பிரச்சினைகளை மனதில் வைத்து தான் பார்ப்பார்கள். சுமாராக இருக்கும் படங்கள் கூட இந்த பிரச்சினையால் ஓடாமல் கூட போய்விடும் என இந்த முழு தகவலை பிரபல மூத்த பத்திரிக்கையாளர் சுபேர் கூறி இருக்கிறார்.

முதலில் தமிழ் நாட்டில் ஆல்பம் சாங் ஒன்றை பாட வந்திருந்த இடத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டவர்தான் ஜெயம்ரவி. அந்த நேரத்தில் கெனிஷாவுக்கு பல வகைகளில் உதவி செய்திருக்கிறாராம் ஜெயம் ரவி. அதிலிருந்து தொடர்ந்த நட்பு இப்போது எங்கு வந்து நிற்கிறது பாருங்க...

Tags:    

Similar News