Connect with us

latest news

எழில் பிரச்னையை சொல்ல முடியாமல் தவிக்கும் பாக்கியா… வெடித்த செழியன் பிரச்னை..!

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் சமையலறையில் பாக்கியா அமிர்தா விஷயமாக யோசித்து கொண்டு இருக்கிறார். செல்வி ரெஸ்டாரெண்ட் காசுக்கு யோசித்து கொண்டு இருக்காரோ என நினைத்து என்னக்கா என்ன காசுக்கு யோசனையா என்கிறார். அமிர்தா இருப்பதால் இல்லை வேறு யோசனை என அமைதியாகி விடுகிறார்.

அந்த நேரத்தில் கேண்ட்டீனில் வேலை செய்த பெண்கள் வர அவர்களுக்கு செட்டில் செய்கிறார் பாக்கியா. உடனே ஈஸ்வரி அன்னைக்கு காசு கொடுக்காதப்ப என்னம்மா பேசுனாங்க. இப்ப பாரு. அவங்களிடம் ஜாக்கிரதையா இருந்துக்கோ என எச்சரிக்கிறார். ராமமூர்த்தி எல்லாம் பாக்கியாவுக்கு தெரியும் என்கிறார்.

இதையும் படிங்க: டங்கி ட்விட்டர் விமர்சனம்: 3 இடியட்ஸ் படத்துக்கு பிறகு ராஜ்குமார் ஹிரானி சம்பவம்.. செம ஷாருக்கான்!

பின்னர் பெயரில்லாத மூன்று கவர் இருப்பதாக அமிர்தா தருகிறார். அதில் ஒன்றை செல்விக்கு கொடுக்க அவர் சந்தோஷமாக வாங்கி கொள்கிறார். இன்னொன்றை அமிர்தாவிடம் கொடுக்கிறார். அவர் தயங்க இது உன் உழைப்புக்கான ஊதியம் எனக் கூறி கொடுக்கிறார்.

இன்னொர் கவரை எழிலிடம் கொடுத்து அவனிடம் வாங்கிய கடன் எனக் கூற அமிர்தா நீங்களே கொடுங்க எனக் கொடுக்கிறார். ஆனால் பாக்கியா நான் தந்தால் வாங்க மாட்டான். நீயே கொடுத்துவிடு என்கிறார். இதையடுத்து கோபி மாலை வீட்டுக்கு வருகிறார்.

இதையடுத்து அங்கு செழியனும் இருக்க பாக்கியா பேச வேண்டும் என்கிறார். நீ தான் பெரிய ஆள் என்கிட்டலாம் பேசுற எனக் கேட்கிறார். இது பிள்ளைங்க விஷயம் என்கிறார். இருந்தும் கோபி அலட்டிக்கொள்ள ராதிகா ஏற்கனவே இப்படி ஒரு விஷயம் நடந்து இருக்கு. இப்போவே பேசுங்க என உட்கார சொல்கிறார்.

இதையும் படிங்க: சூர்யா துண்டக் காணோம் துணியக் காணோம்னு ஓடுன வணங்கான் படம்!.. இப்போ எப்படி வந்துருக்கு தெரியுமா?..

பின்னர் ராமமூர்த்தி, ஈஸ்வரி வந்து அமர நானே சரி செஞ்சிடலாம் நினைச்சேன். ஆனா முடியலை எனக் கூறி சொல்ல வருகிறார். ஆனால் அந்த நேரத்தில் போஸ்ட் மேன் வந்து செழியனுக்கு ஒரு போஸ்ட்டை கொடுக்க அவர் பிரித்து ஷாக் ஆகிவிடுகிறார். அனைவரும் பதறி என்ன விஷயம் எனக் கேட்கின்றனர்.

ஜெனியிடம் இருந்து விவகாரத்து தபால் வந்து இருப்பதாக கூற குடும்பமே அதிர்ச்சியில் உறைகின்றனர். இதையடுத்து இனி என்னால் என் குடும்பத்துடன் இருக்கவே முடியாதா? என அழுதுக்கொண்டே ரூமுக்குள் செல்கிறார் செழியன். எழில் விஷயத்தை சொல்ல முடியாமல் செழியன் வாழ்க்கை பிரச்னை என பாக்கியா கலங்கி நிற்கிறார்.

ரூமுக்குள் இருக்கும் செழியனை ராதிகா மற்றும் கோபி வந்து சமாதானம் செய்கின்றனர். செழியன் நான் தான் தப்பு செய்து விட்டதாக கூறி அழுதுக்கொண்டு இருப்பதுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.

இதையும் படிங்க: மனுஷனை அந்த அளவுக்கு ஓட்டுனாங்க!.. வெள்ளத்துல இறங்கி மக்களை எப்படி காப்பாத்துறாரு மாரி செல்வராஜ்!

google news
Continue Reading

More in latest news

To Top