Connect with us

latest news

கோபிக்கு முன்னாடி சண்டைக்கு நிப்பாங்க பாத்தா..! இப்படியா சப்போர்ட் பண்ணுறீங்க..!

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் கோபி பிரச்னை தெரிந்தவுடன் ராதிகா உச்சக்கட்ட கோபத்தில் சண்டைக்கு நிற்பார் என எதிர்பார்த்தால் அவர் அமைதியாக பேங்க் ஆட்களிடம் நாளைக்கு கட்டிவிடுவார் எனச் சொல்லி அனுப்பி விடுகிறார்.

அவர் வீட்டுக்குள் போக பின்னால் வரும் ஈஸ்வரி அவன் கட்டிடுவான். ஆனா மறந்து இருப்பான். இதை சொல்லி அவன்கிட்ட சண்டை போடாதே எனக் கூற இப்போ அவர் செஞ்சது தப்பு இல்ல. உங்களுக்கு நான் சண்டை போடுறது தான் தப்பா இருக்கா எனக் கேட்கிறார்.

இதையும் படிங்க: மாமனார் வீட்டை காலி பண்ணிட்டு மும்பையில் செட்டில் ஆக காரணமே இதுதான்!.. ஜோதிகாவின் அடடே விளக்கம்!..

உடனே ஈஸ்வரி கோபிக்கு கால் செய்து உடனே வீட்டுக்கு வரச் சொல்கிறார். அவர் வந்ததும் அன்னைக்கே நகையை கொடுத்தேன்ல. ஏன் கட்டாம விட்ட இன்னைக்கு வந்தாங்க? ராதிகாவும் இருந்ததாக கூறுகிறார். அப்போ அவளுக்கு தெரிஞ்சிட்டா எனக் கேட்கிறார்.

ஆமாம் எனக் கூறியதும் பயந்து கொண்டே உள்ளே போகிறார். மறந்து விட்டதாக கோபி சமாளிக்க எது 6 மாதமாவா எனக் கேட்கிறார். உங்க அம்மா எல்லார்கிட்டையும் சொல்லாம எப்படி மறைக்க கஷ்டப்பட்டு இருப்பாங்க? ஏன் அவங்களுக்கு இந்த டென்சன். நம்ம நிலைமை மத்தவங்களுக்கு தெரிஞ்சா எப்படி மதிப்பாங்க?

முன்னாடியே சொல்லிருக்கலாம் தானே என சண்டை போடாமல் தான் பேசுகிறார். இதையடுத்து ஹாலில் உட்கார்ந்து கோபி யோசித்து கொண்டு இருக்க ஈஸ்வரி நகையை கொண்டு வந்து கொடுக்கிறார். இதை வச்சு உடனே கடனை முடி என்கிறார். இதற்கிடையில் ராதிகாவும் ப்ளான்க் செக்கை கொண்டு வந்து நீட்டுகிறார்.

இதையும் படிங்க: ஏன்டா இப்படி பண்ணிட்டீங்க.. மனசு உடைந்து திடீரென கதறி அழுத மீசை ராஜேந்திரன்!.. ஏன் தெரியுமா?..

இரண்டு பேருமே தன்னோடதை வாங்கிக்க கூற கடைசியில் கோபி இது என் பிசினஸ் பிரச்னை நானே பாத்துக்கொள்கிறேன் எனக் கூறி செல்கிறார். பொருட்காட்சியில் விற்பனை சூடுப்பிடிக்கிறார். விற்பனையும் அமோகமாக நடந்து கொண்டு இருக்கிறது.

நாட்கள் கடந்து பாக்கியா வீட்டுக்கு சந்தோஷமாக வருகிறார். எப்படி வியாபாரம் எனக் கேட்க சூப்பரா போவதாக சொல்கிறார். போட்ட காசை எடுத்தடலாமா எனக் கேட்க அதுக்கு ரொம்ப மேலையே கிடைத்து இருப்பதாக கூறுகிறார். இதில் அங்கிருக்கும் கோபிக்கு முகம் தொங்கிவிடுகிறது.

நிறைய ஐடி கம்பெனியில் இருந்து ஆர்டர் வந்து இருக்கு. அதை செஞ்சா நல்லா செட்டில் ஆகிடலாம் என்கிறார். இதையடுத்து கோபி அங்கிருந்து எழுந்து சமையலறைக்கு சென்று விடுகிறார். அங்கு ராதிகா உட்கார்ந்து இருக்க என்ன எனக் கேட்க ஒன்னும் இல்லையே எனக் கூறி அமைதியாக உட்கார்வதுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.

google news
Continue Reading

More in latest news

To Top