மறுபடியும் முதல்ல இருந்தா.. ஈஸ்வரியால் கடுப்பான பாக்கியா..! சண்டைக்கு இனி பஞ்சமே இல்ல போல!

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் வீட்டுக்கு கோபியை பார்க்க வருகிறார் ஈஸ்வரி. வீட்டுக்கு ராதிகா அம்மாவிடம் சண்டை போட்டவர் கோபி பார்த்து கவலைப்படுகிறார். நம்ம வீட்டுல இருந்தப்பா உனக்கு எதுவுமே வரலையே எனக் கூறி ராதிகாவை கடுப்பேற்றுகிறார். தொடர்ந்து ராதிகா அவருக்கு நெஞ்சு வலியெல்லாம் வரலை இது பேனிக் அட்டாக் தான் எனக் கூற எல்லாம் அட்டாக் தான் என சொல்லி அழுகிறார். தொடர்ந்து செழியனை தனியாக அழைத்து வரும் ராதிகா நடந்த விஷயத்தினை கூறுகிறார். அவருக்கு நெஞ்சு […]

By :  Akhilan
Update: 2023-10-20 00:24 GMT

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் வீட்டுக்கு கோபியை பார்க்க வருகிறார் ஈஸ்வரி. வீட்டுக்கு ராதிகா அம்மாவிடம் சண்டை போட்டவர் கோபி பார்த்து கவலைப்படுகிறார். நம்ம வீட்டுல இருந்தப்பா உனக்கு எதுவுமே வரலையே எனக் கூறி ராதிகாவை கடுப்பேற்றுகிறார்.

தொடர்ந்து ராதிகா அவருக்கு நெஞ்சு வலியெல்லாம் வரலை இது பேனிக் அட்டாக் தான் எனக் கூற எல்லாம் அட்டாக் தான் என சொல்லி அழுகிறார். தொடர்ந்து செழியனை தனியாக அழைத்து வரும் ராதிகா நடந்த விஷயத்தினை கூறுகிறார். அவருக்கு நெஞ்சு வலினா வீட்டுக்கு விட்டு இருப்பாங்களா எனக் கேட்க செழியனும் புரிந்து கொள்கிறார்.

இதையும் படிங்க: விஜய்க்கே படம் பிடிக்கலையா!.. கடைசி வரை லியோவை கண்டுக்காமல் விட காரணமே அதுதானா?..

அதையெடுத்து ஸ்டெஸால தான் இந்த பிரச்னை எனத் தெரிந்து கொண்ட ஈஸ்வரி ராதிகாவால தான் எல்லாம் என திட்டுகிறார். செழியனை அவரை சமாளிக்க முடியாமல் திணறுகிறார். ஒருகட்டத்தில் பாக்கியா வீட்டுக்கு அழைக்கிறார்.

இதனால் ராதிகா அதிர்ச்சி ஆகிறார். கோபி எனக்கு எதுவும் இல்லை எனவும் கூறி சமாளிக்கிறார். ஆனால் ஈஸ்வரி பிடிவாதமாக கூறிவிடுகிறார். வீட்டுக்கு வரும் ஈஸ்வரி கோபிக்கு எதுவும் ஆகிடும். நான் கூட்டிட்டு வரப்போகிறென் எனச் சொல்ல அங்கிருப்பவர்கள் அதிர்ச்சி ஆகிவிடுகின்றனர்.

எழில் அது சரிவராது எனக் கூறுகிறார். ஆனால் ஈஸ்வரி அவன் கஷ்டப்படுறத பார்த்துட்டு என்னால் இருக்க முடியாது எனக் கூறுகிறார். எல்லாரும் அவன் அழைச்சிட்டு வந்தா இங்க கஷ்டம் வரும் எனக் கூறுகின்றனர். ஆனால் ஈஸ்வரி கோபி கஷ்டப்படுறான் எனப் பிடிவாதமாக இருக்கிறார்.

இதையும் படிங்க: தாத்தாவ வச்சே படம் எடுக்குறீங்க! அப்பா என்ன தக்காளி தொக்கா?.. தயாரிப்பாளரிடம் மல்லுக்கு நின்ன தனுஷ் மகன்..

கடைசியில் பாக்கியாவே அவர் வரும் நிமிடத்தில் நான் வெளியில் போய்விடுவேன் என்கிறார். இனியா எங்கம்மா போவ எனக் கேட்க எங்கையோ போவேன் எனக் கூறி எழில் நீ ஏன் மா போகணும். அவரை வரக்கூடாதுனு சொல்ல என்கிறார். ஈஸ்வரி நீ ஏன் அவளை ஏத்திவிடுற என்கிறார். எல்லாரும் மனசு வச்சா ஒரே வீட்டுல இருக்கலாம் என ஈஸ்வரி திட்டமாக சொல்லிவிடுகின்றார்.

இதே ராதிகா அம்மா கோபியிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு குடைச்சல் கொடுக்கிறார். அவங்க கூப்பிட்ட நான் கிளம்பி போயிடுவேனா எனச் சொல்லி கோபி சமாளிக்கிறார். இதையடுத்து ராதிகா அம்மா அவரை அழைத்து வெளியில் கூட்டிட்டு போய் கவனமா இரு. வாழ்க்கையில் பத்திரம் என எச்சரிக்கை கொடுப்பதுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.

Tags:    

Similar News