Connect with us

latest news

பாக்கியலட்சுமி: ராதிகாவால் ரோட்டுக்கு வந்த கோபி… அதான் நெஞ்சு வலி ட்ராமாவோ?

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் ஈஸ்வரி ஏன் நிலாவை வெளியில் அனுப்ப வேண்டாம் என சொல்ற எனக் கேட்கிறார். வெளியில் நிறைய கொசு இருக்கு. இப்போ இருக்க நிலைமையில நிறைய வியாதி வருவதாக சொல்லி சமாளிக்கிறார். ஈஸ்வரிக்கு குழப்பம் ஏற்பட சரி என கோயிலுக்கு அமிர்தாவை கூப்பிடுகிறார்.

ஆனால் இல்லை அமிர்தா வீட்டைலையே இருக்கட்டும் அத்தை. நிலாவுக்கு சாப்பாடு பாக்கணும். ஜெனிக்கும் துணை வேணும் என்கிறார். இதையடுத்து அமிர்தாவை வீட்டிலேயே இனி தான் நீ ஜாக்கிரதையா இருக்கணும் என்கிறார் பாக்கியா. இதனால் அமிர்தாவுக்கே குழப்பம் ஏற்படுகிறது.

இதையும் படிங்க: நள்ளிரவில் லியோ நடத்திய சாதனை!.. அடேங்கப்பா ஒரே ரத்த களறியா இருக்கே.. பாக்ஸ் ஆபிஸ் பிச்சிக்கப்போகுது!..

இதையடுத்து பாக்கியாவும், ஈஸ்வரியும் கோயிலுக்கு கிளம்பி செல்கின்றனர். ஹோட்டலில் தன் நண்பன் சதீஷுடன் அமர்ந்து பேசி கொண்டு இருக்கிறார் கோபி. பிசினஸ்ல எல்லாம் பெரிய நஷ்டம். 6 கிரெடிட் கார்ட் இருக்கு அதுல எதுலையுமே காசு இல்லை. வீட்டுக்கு வேற ஆள் தேடி வராங்க. என்ன செய்ய போறேன் தெரியலைடா என்கிறார்.

நீ பாக்கியாவை பார்த்துக்கிட்டே இருந்தப்பையே நினைச்சேன் என திட்டுகிறார். பின்னர், இதில் என் மாமியாருக்கு 60 வது பிறந்தநாளைக்கு எங்க வீட்டு மகாராணி கிப்ட் யோசித்து வச்சிருக்கா தெரியுமா? 4 சவரன் செயின் போடணுமாம் எனக் கூறுகிறார். இதனால் சதீஷுக்கே அதிர்ச்சி ஆகி விடுகிறது.

ராதிகா கிட்ட இதையெல்லாம் சொல்ல வேண்டி தானே என அவர் கேட்கிறார். சொல்ல எனக்கு தைரியம் இல்லைடா. செயின் வாங்க காசு தரியா என சதீஷிடமே கேட்க அட போடா உன்கிட்ட கொடுத்த காசே நீ தர மாட்டேனு தெரிஞ்சிப்போச்சு. இதுல பிசினஸுக்கு சொன்னாலும் பரவாயில்லை. மாமியாருக்கு செயின் வாங்க காசா என திட்டி விட்டு செல்கிறார்.

இதையும் படிங்க: சல்மான் கான் அவ்ளோ உசுர கொடுத்து நடிச்சா!.. அத யாரு பார்க்குறா.. கத்ரீனா கைஃப் டவல் சீன் தான் செம வைரல்!..

பின்னர் வீட்டுக்கு செல்லும் கோபியிடம் ஷாப்பிங் போலாமா என ராதிகா கேட்கிறார். இல்லை என தலைவலி இன்னொரு நாள் போகலாம் என ஏமாற்றி விட்டு ரூமுக்குள் சென்று விடுகிறார். இதையடுத்து ஈஸ்வரியும், பாக்கியாவும் கோயிலுக்கு சென்று கொண்டு இருக்கின்றனர்.

என்ன பிரச்னை நீயே மனசுல போட்டு குழப்பிக்காத என ஈஸ்வரி சொல்ல விஷயத்தினை சொல்லலாமா என பாக்கியா யோசிக்கிறார். எனக்கு எழில், அமிர்தா கல்யாணம் நடந்ததுல இப்ப வரைக்கு மனசு உறுத்துது. அமிர்தா நல்ல பொண்ணு தான். ஆனால் இந்த கல்யாணம் நடக்காமல் இருந்து இருக்கலாம் என்கிறார். இதில் பாக்கியா அதிர்ச்சியாவதுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது. 

ஏற்கனவே வெளியாகி இருந்த வார ப்ரோமோவில் கோபிக்கு நெஞ்சு வலி எனக் கூறப்பட்டு இருந்த நிலையில் ராதிகாவிடம் இருந்து தப்பிக்க கோபி போட்ட ப்ளான் தானோ என இப்போதே ரசிகர்களிடம் பேச்சுகள் எழுந்து விட்டது. பொறுத்து இருந்து பார்ப்போம்.

google news
Continue Reading

More in latest news

To Top