Connect with us

latest news

ஏலேய் எங்களை பாத்தா எப்படி தெரியுது..? மூணு நாளா ஒரே சண்டையை வச்சு ஓட்டும் பாக்கியலட்சுமி டீம்..!

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் ராதிகாவும், இனியாவும் வீட்டுக்குள் வருகின்றனர். இனியா என்னம்மா ஆச்சு என பாக்கியாவை கேட்க ஒன்னும் இல்லை. நீ வீட்டுக்குள் போ என்கிறார். ஏன் போகணும் அவளுக்கும் உன் ஒழுக்கம் தெரியணும் என்கிறார் கோபி.

ஒழுக்கத்தினை பத்தி எல்லாம் நீங்க பேசாதீங்க என்கிறார். இதையடுத்து கோபி ராதிகாவிடம் நீயாவது நியாயத்தை கேளு என்க, அப்படி என்ன தான் பிரச்னை என்கிறார் ராதிகா. கோபி தனக்கு சாதகமாக விஷயத்தினை மாத்தி சொல்ல எழில் முழுசா சொல்லுங்க.

இதையும் வாசிங்க:உன்கூட இருக்க ஒருத்தனையும் நம்பாதே!. கழுத்த அறுத்துருவானுங்க!. எம்ஜிஆரை எச்சரித்த எம்.ஆர்.ராதா

செழியன் தானே சொல்வதாக கூறி நடந்த விஷயங்களை கூறிவிடுகிறார். இதை கேட்டு கடுப்பான ராதிகா வாங்க நம்ம வீட்டுக்கு போவோம் என கோபியை கூப்பிடுகிறார். ஆனால் கோபி நழுவுகிறார். இதனால் பேசாமல் ரூமுக்குள் சென்று கதவை சாத்தி விடுகிறார். வருவா என் பேபி பேக்கை வச்சிட்டு வந்து சண்டை போடுவா என்கிறார். 

எல்லாரும் கடுப்பாகி போக ஈஸ்வரி இனி கோபி பாக்கியா விஷயத்தில் தலையிட மாட்டான். அதுப்போல பழனிசாமியும் இங்கு அடிக்கடி வரக்கூடாது என்கிறார். இதனால் எல்லாரும் கடுப்பாகிவிடுகின்றனர். இனியா அவர் ரொம்ப நல்லவரு. ஏன் வரக்கூடாது? அம்மா ப்ரண்ட்டை வரக்கூடாதுனு சொல்றது தப்பு பாட்டி என்கிறார் செழியன்.

நான் கோபி சொன்னதுக்காக சொல்லலை. அவரால தான காண்ட்ராக்ட் எடுத்து காசெல்லாம் போச்சு என்கிறார். செழியன் அவர் ஒன்னும் அம்மாவை கட்டாயப்படுத்தல. அவர் உதவிதான் செஞ்சாரு என்கிறார். இதற்கிடையில் ராதிகா வரவில்லையே என கோபி யோசித்து கொண்டு இருக்கிறார்.

இதையும் வாசிங்க:இந்திப்பாடகியையே அழ வைத்த இளையராஜாவின் இசை… அவ்ளோ உருக்கமான பாடலாம்!..

ரூமுக்கு போய் பார்க்க ராதிகா தலையில் கை வைத்துக் கொண்டு அமர்ந்துவிடுகிறார். கோபி என்ன நீ எனக்காக பேசுவேனு பாத்தா இங்க வந்து உட்கார்ந்து இருக்க என்கிறார். என்ன பேச நான் வந்து பேசுனா விஷயம் வேற மாதிரி தான் போகும் என்கிறார். அதலாம் இல்ல எனக்கு, நீயும் அம்மாவும் தான் ஆதரவு வா எனக் கூட்டி செல்கிறார். வெளியில் ராதிகாவுடன் கோபி சந்தோஷமாக உள்ளே வருகிறார்.

இதையடுத்து கோபியிடம் ராதிகா நான் தெரியாம தான் கேட்கிறேன். டைவர்ஸ் ஆச்சுனு தானே என்னை கல்யாணம் செஞ்சிக்கிட்டீங்க. இங்க யாரும் உங்களுக்கு சப்போர்ட் செய்றாங்களா. பாக்கியா யாருகிட்ட பேசுனா உங்களுக்கு என்ன என்கிறார்.

மேலும், என் பிள்ளைகளுக்கு நான் பேசுவேன் எனக் கோபி கூற, ஆனா அவங்களே அவங்க அம்மாக்கு தானே சப்போர்ட்டா இருக்காங்க. இப்போ என்ன நான் பாக்கியாகிட்ட போய் உங்க முன்னாள் கணவர், அதாவது இப்போ என் புருஷன் என்ன சொன்னாலும் நீங்க கேட்கணும்னு சொல்லணுமா?

இல்ல உங்க பிள்ளைகள் கிட்ட போய் உங்க அம்மாக்கு சப்போர்ட் பண்ணாதீங்கனு சொல்லணுமா என்கிறார். இதையடுத்து ஈஸ்வரியிடம் திரும்பி என்ன அத்தை நான் பேசுறது சரிதானே எனக் கேட்க, அத்தையெல்லாம் கூப்பிடாத என்கிறார். அப்போ நான் பேசுனது சரி தானே என்கிறார். ஈஸ்வரி அமைதியா நிற்க ராமமூர்த்தி உனக்கு தேவைடா என சிரித்து கொள்கிறார். ராதிகா கடுப்பாகி ரூமுக்கு செல்வதுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.

இதையும் வாசிங்க: சரோஜாதேவி எடுத்த தவறான முடிவு!.. மொத்தமா மார்க்கெட் போனதுதான் மிச்சம்!…

google news
Continue Reading

More in latest news

To Top