Connect with us

latest news

பாக்கியாவுக்கு மீண்டும் கிடைத்த காண்ட்ராக்ட்… கடுப்பில் கோபி… ராதிகா செய்த அதிர்ச்சி சம்பவம்..!

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் பழனிசாமியுடன் வெளியில் போன பாக்கியா இன்னும் வரலையே எனக் கேட்டு கொண்டு இருக்க எழில், ராமமூர்த்தி கடுப்பாகின்றனர். இதையடுத்து அந்த நேரத்தில் உள்ளே வருகிறார் பாக்கியா.

ஈஸ்வரி எங்க போயிருந்த இவ்வளோ நேரம். என்கிட்ட கூட சொல்லாம போயிட்ட என கோபப்படுகிறார். பழனிச்சாமி சார் ஒரு முக்கியமான விஷயம் பேசணும்னு கூட்டிட்டு போயிருந்தார். என்னவென ஈஸ்வரி கேட்க, காண்ட்ராக்ட் விஷயமா போனதாக கூறுகிறார் பாக்கியா.

இதையும் படிங்க: போர் அடிக்குது.. என்ன செய்யிறதுனு தெரியலை.. அதான் இதை செய்ய போறேன்.. மிஷ்கின் தடாலடி..!

அதான் போச்சுல என்கிறார் ஈஸ்வரி. காண்ட்ராக்ட் திரும்பவும் நமக்கே வந்துட்டு. காண்ட்ராக்ட் எடுத்தவர் நமக்கு திருப்பி கொடுத்துட்டார். ஆனால் கூடுதலா ஒரு 50 ஆயிரம் கேட்டு இருக்கார் என பாக்கியா கூறுகிறார். ஏற்கனவே ஒரு லட்சம் போச்சு இப்போ 50 ஆயிரம் வேறையா. இது எதுவும் எனக்கு நல்லதா படல. இதெல்லாம் வேண்டாம் என்கிறார் ஈஸ்வரி.

கோபி அந்த பழனிசாமியுடன் சேர்ந்து கொண்டு செய்றது சரியா வராது என்கிறார். எனக்கு நம்பிக்கை இருக்கு. என்னால இதை செய்ய முடியும் என்கிறார் பாக்கியா. இதையடுத்து எழில் தன்னிடம் இருந்த 50 ஆயிரம் பணத்தை பாக்கியாவிடம் கொடுக்கிறார். நீ கண்டிப்பா இப்போ இதை வாங்கிக்கணும் என்கிறார் எழில். பின்னர் எழில்,பாக்கியா மற்றும் பழனிச்சாமி என மூவரும் காண்ட்ராக்ட் கொடுத்தவரிடம் காசை கொடுத்து ஆர்டரை வாங்குகின்றனர். 

இதையும் படிங்க: டேக் ஆப் ஆகும் மிஷ்கின் – விஜய் சேதுபதி படம்!.. வில்லனாக களமிறங்கும் விடாமுயற்சி பட நடிகர்…

வீட்டுக்கு வந்து இது குறித்து சந்தோஷமாக பாக்கியா பேசிக்கொண்டு இருக்கிறார். அங்கு வரும் ஈஸ்வரி நீ செய்றது எதுவுமே சரியா படலை. தப்பா போச்சு நீ என்கிட்ட பேசவே கூடாது எனக் கூறுகிறார். அடுத்து கோபி வந்து லட்சக்கணக்கான பேர் வருவாங்க. எப்படி உன்னால சமாளிக்க முடியும் என்கிறார். பாக்கியா நீங்க இப்படி பேசி பேசி தான் நான் இந்த இடத்துக்கு வந்து இருக்கேன் என பதிலடி கொடுக்கிறார்.

இதையடுத்து ராதிகா கிச்சனுக்கு வர, இனி யாருடைய தொந்தரவும் இருக்காது என்கிறார் செல்வி. இதை கேட்டு அருகில் வரும் ராதிகா கையை நீட்டுகிறார். அதிர்ந்து எழுந்து நிற்கும் பாக்கியாவும் அவருக்கு கை கொடுக்க வாழ்த்துக்கள் என்கிறார் ராதிகா. இருவர் கண்ணிலும் நீர் நிற்பதுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.

google news
Continue Reading

More in latest news

To Top