Connect with us

Cinema News

எம்ஜிஆர் பாட்டை போட்டு ரஜினியை பங்கம் பண்ணும் ப்ளூ சட்டை மாறன்!.. விடாது நீலம்!..

ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இருந்தே வேகமெடுத்த ப்ளூ சட்டை மாறன் விடாது நீலமாக தொடர்ந்து ரஜினிகாந்தை துரத்தி துரத்தி துவம்சம் செய்து வருகிறார்.

காக்கா – கழுகு கதையை ரஜினிகாந்த் விஜய்க்காக சொன்னாரா இல்லை எனக்காக சொன்னாரா என ப்ளூ சட்டை மாறன் கருத்துக் கணிப்பே நடத்தி ரஜினி ரசிகர்களை டென்ஷனாக்கிய நிலையில், தொடர்ந்து ஒரு நாளைக்கு ஏகப்பட்ட ட்வீட்களை போட்டு இதுதான் கல்லா கட்ட வேண்டிய நேரம் என அடித்து நொறுக்கி வருகிறார்.

இதையும் படிங்க: விடாமுயற்சி அவ்ளோ தான் போல!.. தலைவர் 170 பட பூஜைக்கே தேதி குறித்த லைகா.. செம ஸ்பீடில் சூப்பர்ஸ்டார்!..

ரஜினியை வச்சு செய்யும் ப்ளூ சட்டை மாறன்:

ரஜினிகாந்த்தின் ஜெயிலர் படம் வெளியாகி வசூல் வேட்டை நடத்திய நிலையில், அத்தனையும் வடை வசூல் என சொல்லி வந்த ப்ளூ சட்டை மாறனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே சன் பிக்சர்ஸ் 375 கோடி வசூலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது என பலரும் ப்ளூ சட்டையை பஞ்சர் பண்ண நிலையில், தொடர்ந்து தலீவருக்கு டிஞ்சர் போட்டு வருகிறார் ப்ளூ சட்டை மாறன்.

யோகி ஆதித்யநாத் காலில் ரஜினிகாந்த் விழுந்த சம்பவத்தை பிடித்துக் கொண்ட ப்ளூ சட்டை மாறன் தொடர்ந்து ரஜினிகாந்தின் சாயத்தை வெளுக்கிறேன் பாரு என அப்பட்டமாக ஆன்மிக அரசியலை நடத்துகிறேன் என சொன்னவர் பற்றி அனைவருக்கும் தெரிந்த விஷயங்களையே பதிவிட்டு வருகிறார்.

இதையும் படிங்க: பிரச்சினையை ஊதி ஊதி பெருசாக்கி எப்படியோ ‘ஜெய்லர்’ படத்தை ஓட வச்சுட்டாங்க! அப்போ அதுதான் காரணமா?

எம்ஜிஆர் பாட்டு போட்டு பதிலடி:

ரஜினிகாந்த் ரசிகர்களிடம் இருந்து தப்பிக்க, விஜய் மற்றும் அஜித்தை புகழ்ந்து அந்த ரசிகர்களின் சப்போர்ட்டை பெற நினைத்தும் கடைசியில் பெருமூச்சு விட்டது தான் மிச்சம். பஜன்லால் சேட்டு, மூஞ்சில தொப்பை என வலிமை வந்த போது அஜித்தை கலாய்த்து விட்டு, வாரிசு ரிலீஸின் போது மெகா சீரியல் என விஜய்யை கலாய்த்து விட்டு இப்போ அவர்கள் இருவரும் சூப்பர், சூப்பர்ஸ்டார் தான் சரியில்லை என பல்டி அடித்து வருகிறார் என்கிற விமர்சனங்களும் ப்ளூ சட்டை மாறனுக்கு வைக்கப்பட்டு வந்தாலும் அசராமல் தலைவன் மறுபடி மறுபடி ரஜினிகாந்தை வச்சு செய்து வருகிறார்.

எம்ஜிஆரின் நினைத்ததை முடிப்பவன் படத்தில் இடம்பெற்ற சூப்பர்ஹிட் பாடலான “கண்ணை நம்பாதே.. உன்னை ஏமாற்றும் பாடலில் வரும் “ஓம் முருகா என்று சொல்லி உச்சரிக்கும் சாமிகளே ருத்ராட்சை பூனைகளா வாழுறீங்க” என்கிற வரிகளை போட்டு நடிகர் ரஜினிகாந்த் ஆன்மிகத்தின் போர்வையில் மக்களை ஏமாற்றி பிழைக்கிறார் என பதிவிட்டுள்ளார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top