ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே செமயா இருக்கே!.. வெளியானது ஜெயம் ரவி 34வது பட அறிவிப்பு!…

Published on: November 7, 2024
---Advertisement---

Jayam ravi: ஜெயம் திரைப்படம் மூலம் அறிமுகமான ரவி அந்த படத்தின் வெற்றிக்கு பின் ஜெயம் ரவியாக மாறினார். துவக்கத்தில் அண்ணன் இயக்கத்தில் தெலுங்கு டப்பிங் படங்களில் நடித்துவந்த ரவி அதன்பின் மற்ற இயக்குனர்களின் படங்களில் நடிக்க துவங்கினார். ஒரு மினிமம் கேரண்டி உள்ள நடிகராக உருவெடுத்தார் ஜெயம் ரவி.

பல ஹிட் படங்களிலும் நடித்திருக்கிறார். பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான கோமாளி படமும், மணிரத்னம் படத்தில் நடித்த பொன்னியின் செல்வன் படமும் ஜெயம் ரவிக்கு சூப்பர் ஹிட் படங்களாக அமைந்தது. அதேநேரம், கடந்த சில வருடங்களாக அவரின் நடிப்பில் வெளியான அகிலன் உள்ளிட்ட சில படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை.

ஒருபக்கம், தனது திருமண வாழ்விலும் பிரச்சனையை சந்தித்தார் ஜெயம் ரவி. தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார். அதோடு, விவாகரத்துக்கான காரணங்களையும் சொல்லி இருந்தார். ஆனால், அவரின் மனைவி ஆர்த்தியோ விவாகரத்து பற்றி தனக்கு எதுவும் தெரியாது என சொல்லி இருந்தார்.

தற்போது மும்பையில் தங்கியிருக்கும் ஜெயம் ரவி அங்கேயே தனக்கென ஒரு அலுவலகத்தையும் திறந்திருக்கிறார். இனிமேல், மும்பையில் இருந்தபடியே திரைப்படங்களின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என சொல்லப்படுகிறது. இதுவரை 33 படங்களில் நடித்திருக்கிறார் ஜெயம் ரவி.

இந்நிலையில், அவரின் 34வது திரைப்படத்தை டாடா படத்தை இயக்கிய கணேஷ் கே பாபு இயக்கவிருக்கிறார். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கவுள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. அதில், ஜெயம் ரவியின் முகம் வித்தியாசமாக வடிவைக்கப்பட்டிருக்கிறது.

இந்த போஸ்டர் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது. தனது மாமியாரின் தயாரிப்பில் தொடர்ந்து நடித்து வந்த ஜெயம் ரவி தற்போது மற்ற தயாரிப்பாளர்களின் படங்களில் நடிக்க துவங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.