Connect with us

Cinema News

இந்த வயசுலயும் அந்த ஆசை விடலையா.? சரத்குமாரின் பேராசை இதுதான்.!

இயக்குனர் விக்ரமன் எழுதி, இயக்கிய ‘சூர்ய வம்சம்’ திரைப்படம் கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியாகி, விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்தில் நடிகர் சரத்குமார் இரட்டை வேடங்களில் நடித்திருப்பார். மேலும், நடிகை தேவயானி மற்றும் ராதிகாவும் நடித்திருப்பார். இவர்களின் நடிப்பில் உருவான இப்படம் 1997 ஆம் ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்றாகும்.

இந்த மிகப்பெரிய வெற்றியை அடுத்து இந்த படம் தெலுங்கில் அதே தலைப்பிலும், ஹிந்தியில் ‘சூரிய வன்ஷம்’ மற்றும் கன்னடத்தில் ‘சூர்ய வம்ஷா’ என ரீமேக் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. கடந்த 1996 ஆம் ஆண்டு தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி விஜய் நடித்த ‘பூவே உனக்காக’ படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் விக்ரமனை தனது சூப்பர் குட் ஃபிலிம் பேனரில் மீண்டும் ஒரு படத்தை இயக்கச் சொன்னார்.

அந்த வெற்றி படத்தை தொடர்ந்து தான் இந்த ‘சூர்ய வம்சம்’ திரைப்படம் தயாரிக்கப்பட்டது. இந்த திரைப்படம், அந்த காலகட்டத்தில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் இந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்று எதிர்பார்ப்பு இருந்து வந்தது.

இதையும் படிங்களேன் – அது பழைய வீடியோங்க.. ப்ளீஸ் விட்ருங்க… பதட்டத்தில் அனிருத்.? வச்சி செய்து வரும் நெட்டிசன்கள்.!

ஆனால், அப்போது எந்தவித அறிவிப்பும் வரவில்லை. சமீபத்தில், நடிகர் சரத்குமார் ஒரு நேர்காணலில் பேசுகையில், அவரிடம் ‘சூரிய வம்சம்’ படம் இரண்டாம் பாகம் வருகிறதா? என்று கேட்கப்பட்டது. அப்போது சரத்குமார், ஆமா! சூர்யவம்சம் இரண்டாம் பாகத்திற்கான  கதையானது ரெடியாகி இருக்கிறது என்று இயக்குனர் தெரிவித்தார். விரைவில் அது குறித்த அறிவிப்பை தயாரிப்பாளரும் இயக்குனரும் வெளியிடுவார்கள் என்று கூறினார்.

இந்நிலையில், அந்த திரைப்படம் நடிகர் சரத்குமார் அப்போது உள்ள இளமை நிலையில் இருக்கும்போது நடித்ததால் ‘சூர்ய வம்சம்’ மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது இருக்கும் சரத்குமார் இந்த படத்தில் நடித்தால் அந்த படத்தின் கதையும், தரமும் குறைந்து விடுமோ என்று ரசிகர்கள் வருத்தப்பட்டு வருகிறார்கள்.

google news
Continue Reading

More in Cinema News

To Top