Kadhalukku Mariyathai: தமிழ் சினிமாவில் விஜயின் கேரியரையே மாற்றிய ஒரு படம் என்றால் அது காதலுக்கு மரியாதை தான். ஆனால் அந்த படத்தில் ஒரு உண்மை காதல் கதையும் இருக்கிறது என்றால் ஆச்சரியம் தானே. அப்படிப்பட்ட ஒரு தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
படத்தின் கிளைமேக்ஸில் ஷாலினியின் அம்மாவாக நடித்த கேபிஏசி.லலிதாவும், ஸ்ரீவித்யாவும் பேசிக்கொள்வார்கள். வித்யா லலிதாவை நோக்கி நடந்ததெல்லாம் மறந்துடுங்க என்பார். இதுக்கு லலிதா, சேச்சே, இப்போ எதுக்கு அதெல்லாம். மனசுக்கு சங்கடம் தானே. எல்லோரும் எல்லாத்தையும் மறக்கணும்கிறது தான் என்னோட பிரார்த்தனையே என்பார்.
இதையும் படிங்க: அருண் விஜய்யை திருத்திய விஜயகாந்த் மறைவு.. அஞ்சலி செலுத்தியதும் என்ன சொன்னார் தெரியுமா?
எல்லா காட்சியை மாதிரி இதுனு நினைச்சா அதான் இல்லை. இவங்க இரண்டு பேருக்கும் இடையில் வாழ்க்கையே புயல் அடித்து இருக்கிறது. இயக்குனர் பரதனும், வித்யாவும் காதலித்து வந்தனர். ஆனால் இரு வீட்டு தரப்பிலும் எதிர்ப்பு தான் வந்ததாம். பரதன் நேரே லலிதாவின் வீட்டுக்கு சென்று ஸ்ரீவித்யாவிடம் போனில் பேசுவாராம்.
ஆனால் பரதனுக்கு அப்போதைய சமயத்தில் இன்னோரு காதலும் வந்ததாம். அது வேறு யாருமில்லை சீரியல் நடிகையான சாந்தி வில்லியம்ஸ் தான். இதனால், லலிதா மற்றும் ஸ்ரீவித்யா படப்பிடிப்புக்கு சென்ற பரதன் காதலை திடீரென முறித்து கொண்டாராம். ஸ்ரீவித்யா கண்ணீர் விட்டு இருக்கிறார். ஆனால் அவருக்கு அந்த காதலும் நடக்கவில்லை.
இதையும் படிங்க: 16 லட்சத்துடன் எடுக்கப்பட்ட பிக்பாஸ் பணப்பெட்டி… செம டீல் தான்!.. அம்மணி உஷாரு தான் போலயே!..
ஸ்ரீவித்யாவுக்கு ஒரு வீட்டை எடுத்து கொடுத்து செட்டில் செய்தார். பரதன் இரண்டு வீட்டுக்கும் போய் வந்தாராம். லலிதாவின் அழுகை அவர்களை சட்டை செய்யவில்லை. ஆனால், கடைசியில் ஒரு நாளில் குடிக்கு அடிமையான பரதன் 51 நாள் கோமாவில் இருந்து இறந்தே போனார். வித்யாவின் கடைசி காலமும் மோசமாகவே முடிந்தது. அவர்கள் வாழ்க்கை அந்த ஒற்றை வரியில் இருந்து இருக்கும்.
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…
ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…
நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…