Connect with us

Cinema News

இதே கேள்வியை என் புருஷனை பார்த்தா கேப்பீங்களா?.. கோபத்தில் கொந்தளித்த கண்ணகி நடிகை கீர்த்தி பாண்டியன்!

கண்ணகி படத்தில் நடித்த நடிகை கீர்த்தி பாண்டியன் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.  சமீபத்தில் அசோக் செல்வனை திருமணம் செய்து கொண்ட கீர்த்தி பாண்டியன் இனிமேல் தொடர்ந்து சினிமாவில் நடிப்பாரா? என்கிற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சட்டென இதே கேள்வியை நீங்க அசோக் செல்வனை பார்த்து கேட்பீங்களா என கேட்க ஆங்கர் முகமே ஃபீஸ் போன பல்பு போல மாறி விட்டது.

நடிகைகள் திருமணம் செய்துக் கொண்டால் அது நாள் வரை நடித்து வந்த தங்களுக்கு பிடித்த தொழிலை ஏன் விட வேண்டும். நான் மீண்டும் எப்போ நடிக்க போவேன் என ஆர்வமாக உள்ளேன் என்றும், காலம் காலமாக இருக்கும் இதே வழக்கம் 2023லும் ஏன் தொடர்கிறது என்கிற கேள்வியை எழுப்பி உள்ளார்.

இதையும் படிங்க: என்னது லீக் ஆகுதா?.. எங்க பார்க்கச் சொன்ன அசோக் செல்வன் எங்க பார்க்குறாரு பாருங்க.. மானம் போச்சே!

கீர்த்தி பாண்டியனின் இந்த பதில் குறித்து அசோக் செல்வனிடம் பத்திரிகையாளர்கள் கேள்வியை எழுப்ப, நான் அவங்க ஓனர் இல்லையே.. பார்ட்னர் தான அவங்களுக்கு என்ன பிடிக்குதோ அதை செய்யட்டும். இதுவரை நான் நடித்துக் கொண்டிருக்கிறேன். சினிமா தான் எனக்கு எல்லாம். திடீரென நாளையிலிருந்து நீ நடிக்கக் கூடாது என யாராவது சொல்லி விட்டால், என் வாழ்க்கையே சோகமாக மாறிவிடும். அதே போன்ற நிலைமையை நான் இன்னொருத்தருக்கு எப்படி தர முடியும் என அசோக் செல்வன் அளித்த பதிலும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

திருமணத்துக்கு பிறகு மனைவியை அடிமைப்படுத்த நினைக்கும் கணவர்களுக்கு மத்தியில் நான் அவங்க ஓனர் இல்லையே பார்ட்னர் என்கிற பதில் அத்தனை ஆண்களும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.

இதையும் படிங்க: சினிமாவில் செய்த தவறால் மனைவியின் தாலியை விற்ற டி.ஆர்.மகாலிங்கம்!.. அட கொடுமையே!..

google news
Continue Reading

More in Cinema News

To Top