Connect with us

Cinema News

பரபரக்கும் சிறகடிக்க ஆசை… முத்துவை வச்சி ப்ளான் போடும் ஸ்ருதி-ரோகினி!….

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் கிச்சனில் மீனா இருக்க அங்கு வந்த விஜயா அவன வரவேணான்னு சொன்னா, நீ ஏன் வர மாட்டேன்னு சொல்லி சீன் போடுற. நீங்க வரலைனா தனியா பேசிக்க வேண்டிதானே என்கிறார்  விஜயா. உடனே மீனா, நீங்கதானே சபைல வச்சு சொன்னீங்க. அதான் நாங்களும் அங்கையே சொல்லிட்டதாக பதிலடி கொடுக்கிறார்‌.

சரி வரீங்க அங்கு வந்து அவனை எதுவும் பேச கூடாது. சாப்பிட மட்டும் தான் வாயைத் திறக்கணும் என்கிறார். இதை நீங்களே உங்க பிள்ளைக்கிட்ட சொல்லுங்க என்கிறார் மீனா. நான் சொன்னா அவன் கேட்க போறானா?. இப்ப சாவி கொடுக்கிறதே நீ தான் நீயே சொல்லு என சொல்லிவிட்டு செல்கிறார். மாடிக்கு வரும் மீனா அந்த பங்ஷனில் நமக்கு மரியாதை இருக்காது.

இதையும் படிங்க: பாடாய்படுத்தும் நெப்போட்டிசம்!.. தமிழ்த்திரை உலகில் அல்லோகலப்பட்ட நடிகர் நடிகைகள்…

அந்த சிட்டிக்கூட பழகாத எனக் கூற உன் புருஷன் அட்வைஸ் பண்ண அனுப்புனாரா என்கிறார் சத்யா. அவருக்கு வேலை இல்லையா? அம்மாவிடம் திரும்பும் மீனா வீட்டில் விஷேசம் நடக்குது. மாமா கூப்பிட சொன்னாரு. நான் தான் உங்களுக்கு அங்கு மரியாதை இருக்காது எனக் கூப்பிடலை என்கிறார். இதை தொடர்ந்து, ரோகினி மற்றும் வித்யா பேசிக்கொண்டு இருக்கின்றனர்.

வீட்டு விஷேசம் நடக்குது எங்க அப்பாவை வரச்சொல்லி இருக்காங்க. அதுமட்டுமல்லாமல் செலவு வேற இருக்கு. உன்கிட்ட எதுவும் இருக்குமா எனக் கேட்கிறார். அவர் இல்லை எனக் கூறிவிடுகிறார். பின்னர் அம்மாவுக்கு கால் செய்த ரோகினி காசு இருக்குமா எனக் கேட்கிறார். அவரும் நகை இருக்கு ரெடி செய்து வரேன் எனக் கூறிவிடுகிறார். பின்னர் வித்யா அப்பாவை கேட்பாங்களே எனக் கேட்க முத்துவை சீண்டி பிரச்னை பண்ண வச்சிட்டா?

இதையும் படிங்க: இப்பதான் உனக்கு அது தோனுச்சா?!.. படப்பிடிப்பில் விசித்ராவை பாடாய் படுத்திய கவுண்டமணி!..

இந்த வீட்டுக்கு எங்க அப்பாவை கூட்டி வர முடியாது எனச் சொல்லிவிடலாம் என்கிறார். பின்னர் பார்லரில் இருக்கும் ரோகினியை பார்க்க அவர் அம்மா பணத்தை கொடுக்கிறார். அந்த நேரத்தில் விஜயா பார்லருக்கு வந்துவிடுகிறார். இப்போ தப்பிப்பது என யோசித்து கொண்டு இருக்க ரோகினி ஏற்கனவே கோவத்துல இருக்காங்க என யோசிக்கிறார். பின்னர் அம்மாவுக்கு மேக்கப் போட்டு உட்கார வைத்துவிடுகிறார்.

இதை தொடர்ந்து, விஜயா டக்கென உள்ளே நுழைந்துவிடுகிறார். ட்ரெஸெல்லாம் எடுத்தாச்சு. அப்பா கிளம்பிட்டாரா எனக் கேட்க காலையில் ப்ளைட் என்கிறார். பின்னர் நகைக்கு காசு போட்டுவிட்டதாக கூறி எடுத்து கொடுக்கிறார். உங்க அம்மா இருந்தா வந்து இருப்பாங்க. பாவம் அல்பாயிசுல போயிட்டாங்க எனக் கூறுகிறார். இதைக்கேட்டு ரோகினி வருத்தப்பட்டு அம்மாவை பார்ப்பதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது. 

இதையும் படிங்க: நான் ரஜினி கேரக்டரில் நடிக்கிறேன்.. அவரு காமெடி பண்ணட்டும்!.. கடுப்பான கவுண்டமணி!..

author avatar
Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top