">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
நம்ப வச்சு ஏமாத்திட்டீங்க… ஏ ஆர் ரஹ்மானை சாடும் சுஷாந்த் ரசிகர்கள்!
தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் ஹீரோவாக நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் உள்ள அவரது வீட்டில் கடந்த ஜூன் 14ம் தேதி ஞாயிற்று கிழமை தற்கொலை செய்து கொண்டார். நாடகம், சின்னத்திரை , மேடை நடனம் என அடித்தளத்தில் இருந்து முயற்சித்து சினிமாவில் நுழைந்த சுஷாந்தின் வளர்ச்சியை ஏற்றுக்கொள்ளமுடியாமல் பாலிவுட்டின் நட்சத்திர குடும்பங்கள் ஒன்று கூடி அவரை ஒதுக்கியுள்ளனர்.
இந்நிலையில் சுஷாந்த் சிங் இறப்பதற்கு முன்பாக நடித்து ரிலீஸ்க்கு தயாராக உள்ள “தில் பேச்சாரா” படம் வருகிற ஜூலை 24ம் தேதி ஹாட்ஸ்டாரில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சுஷாந்தின் ரசிகர்கள் இந்த படத்தை தியேட்டரில் வெளியிடுவதுதான் சுஷாந்த் சிங்கிற்கு நாம் செய்யும் மரியாதை என கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், கொரோனா எப்போது முடிந்து தியேட்டர்கள் திறக்கப்படும் என்பதே தெரியாத சூழலினால் இந்த படத்தை ஓடிடியில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.
இதனை ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். இதனை கண்ட சுஷாந்த் ரசிகர்கள், உன்னதமான மனிதனின் மறைவிற்கு பிறகும் இப்படி பண்ணலாமா? ஆரம்பத்தில் சுஷாந்த் சிங்கின் கடைசி படத்தை திரையில் வெளியிடுவதாக சொல்லி ஆதரித்து ட்வீட் போட்ட நீங்களே இப்பொழுது இப்படி ஏமாற்றிவிட்டீர்கள் என சுஷாந்தின் ரசிகரக்ள் கொந்தளித்து வருகின்றனர் . “தில் பேச்சாரா” படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Celebrating the late #SushantSinghRajput's legacy that will be etched in the minds of all and cherished forever. #DilBechara coming to everyone on @DisneyPlusHS on July 24. @foxstarhindi @sonymusicindia @DisneyplusHSVIP @MukeshChhabraCC pic.twitter.com/AhC5PKBVau
— A.R.Rahman (@arrahman) June 25, 2020