">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
முதன் முதலாக 2 மொழிகள்… தெலுங்கு பட இயக்குனர்… பேன் இண்டியா ஹீரோவாகும் விஜய்.
முதன் முதலாக 2 மொழிகள்… தெலுங்கு பட இயக்குனர்… பேன் இண்டியா ஹீரோவாகும் விஜய்.
நடிகர் விஜய் மாஸ்டர் திரைப்படத்திற்கு பின் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஜார்ஜியாவில் துவங்கியது. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். முதல் கட்டபடப்பிடிப்பு முடிந்து சில நாட்களுக்கு முன்பு விஜய் சென்னை திரும்பினார். அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கவுள்ளது.
இந்நிலையில், விஜய் ஒரு தெலுங்கு பட இயக்குனரின் கதையில் நடிக்கவுள்ளார் என்பதுதான் கோடம்பாக்கத்தில் பரபரப்பு செய்தியாக வலம் வருகிறது. நாகார்ஜூன், கார்த்தி, தமனா உள்ளிட்ட பலரும் நடித்த ‘தோழா’ படத்தை இயக்கிய வம்சி கூறிய கதை விஜய்க்கு மிகவும் பிடித்துபோக அதை டெவலப் செய்யுமாறு கூறியுள்ளாராம். இவர் மகேஷ்பாபுவை வைத்து மகரிஷி படத்தை இயக்கி விருது பெற்றவர். விஜயை வைத்து வம்சி இயக்கும் இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கவுள்ளாராம்.
இப்படம் தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் வெளியாகவுள்ளது. பாகுபலி, கே.ஜி.எஃப் போல் இப்படம் பேன் இந்தியா திரைப்படமாக உருவாகவுள்ளது. எனவே, பிரபாஸ், யாஷ் போல் விஜயும் பேன் இந்தியா ஹீரோவாக ஆசைப்படுகிறார் என கருதப்படுகிறது. ஏனெனில், இதுவரை விஜய் தமிழ் தவிர வேறு மொழி படங்களில் நடித்ததில்லை.
தளபதி 65 படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. எனவே, யார் இயக்கத்தில் விஜய் தனது 66வது படத்தில் நடிப்பார் என்பது விரைவில் தெரியவும்.