Connect with us

Cinema News

அஜித்துக்கு கடைசி வார்னிங் கொடுத்த லைகா நிறுவனம்!.. இதுவும் மிஸ் ஆனால், நடக்குறதே வேறயாம்!..

அஜித்தின் 62வது படத்தை லைகா ஆரம்பித்ததில் இருந்து ஒரே இடியாப்ப சிக்கலாகவே உள்ளது. இதுவரை அந்த படத்தின் ஷூட்டிங் திட்டமிட்டபடி ஆரம்பிக்காத நிலையில், தயாரிப்பு நிறுவனம் நடிகர் அஜித் மீது கடும் விரக்தியில் உள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

துணிவு படத்திற்கு பிறகு நடிகர் அஜித் ஃபுல் ஸ்பீடில் விஜய்யின் லியோ படத்துடன் மோத ஏகே 62 படத்திற்கு சொதப்பல் கதை சொன்ன விக்னேஷ் சிவனையே வேண்டாம் என தூக்கி அடித்தார்.

இதையும் படிங்க: வேணானு போனாலும் விடமாட்றீங்களே!.. குஷி பட விழாவில் திடீரென தோன்றிய நாகு – கதறி அழுத சமந்தா

அதன் பின்னர், புதிய இயக்குநரை தேட ஆரம்பித்த அஜித்துக்கும் ஏகே 62 படத்தின் இயக்குநரை தேடி லைகா நிறுவனமும் அலைந்த நிலையில், மகிழ் திருமேனி தான் ஏகே 62 படத்த்கை இயக்கப் போவதாக அறிவித்தனர். மே 1ம் தேதி அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு விடாமுயற்சி என படத்தின் டைட்டிலை அறிவித்தனர்.

ஆனால், அதன் பின்னர் கூட இந்த படம் இன்னமும் ஆரம்பிக்கவில்லை. கடந்த புதன்கிழமை விடாமுயற்சி படத்தின் பூஜை சென்னையில் நடைபெற இருந்த நிலையில், கடைசி நேரத்தில் மீண்டும் அது நடக்காமல் மிஸ்ஸான நிலையில் தான் லைகா நிறுவனம் கடும் கோபத்தில் ஆழ்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இதையும் படிங்க: என்னோட வேற முகத்தை லியோ படத்தில் பார்ப்பீங்க… சூப்பர் தகவலை வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்!

விடாமுயற்சி படத்தையே லைகா நிறுவனம் கைவிடப் போவதாக அதிரடியான தகவல்கள் வெளியாகி கோலிவுட்டையே ஆட்டம் காண வைத்துள்ளது. ஆனால், கடைசி நேரத்தில் நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கு விற்கப்பட்ட ஓடிடி உரிமத்தின் 65 கோடி தான் இப்போதைக்கு விடாமுயற்சி படத்தை காப்பாற்றி இருப்பதாகவும் விரைவில் படத்தின் ஷூட்டிங்கை அஜித் ஆரம்பிக்காமல் காலம் தாழ்த்தினால் விடாமுயற்சி படத்தையே டிராப் செய்து விடுவோம் என லைகா நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளதாக ஷாக்கிங் தகவல்கள் வெளியாகி உள்ளன.

google news
Continue Reading

More in Cinema News

To Top