சூர்யா ரூட்டில் இன்னொரு முக்கிய பிரபலமும் கோலிவுட்டை காலி செய்கிறாரா?

Surya: நடிகர் சூர்யா கோலிவுட்டை காலி செய்து மும்பையில் செட்டில் ஆகி இருக்கும் நிலையில் அவருடைய ஐடியாவை பின்பற்றி முன்னணி தமிழ் நடிகர் ஒருவரும் தற்போது மும்பைக்கு மாறியிருப்பதாக தகவல்கள் கசிந்து இருக்கிறது.

கோலிவுட்டில் முன்னணி நடிகராக இருந்தவர் நடிகர் சூர்யா. தயாரிப்பு நிறுவனம், நடிப்பு என பிசியாக இருந்து வந்தவர் திடீரென தன்னுடைய குடும்பத்தை மும்பைக்கு மாற்றி அழைத்துச் சென்றார். அது குறித்த கேள்வி எழுந்தபோது பிள்ளைகளின் படிப்பு காரணமாக கூறப்பட்டது.

இதையும் படிங்க: வாழை படத்தில் பெத்த கோடியை சம்பாரித்த மாரி செல்வராஜ்… இதெல்லாம் நடந்து இருக்கா?

அதைத்தொடர்ந்து நடிகை ஜோதிகா என்னுடைய பெற்றோர்களுடன் சில காலம் வாழ வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். அதே நேரத்தில் நடிகர் சூர்யாவும் பாலிவுட் படங்களில் ஆர்வம் காட்டி வருவதாகவும் தகவல்கள் கசிந்தது. தற்போது அவரின் குடும்பம் மும்பையில் தான் இருந்து வருகிறது.

jayamravi

இந்நிலையில் இதே டெக்னிக்கை தற்போது நடிகர் ஜெயம் ரவியும் ஃபாலோ செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது. தன்னுடைய குடும்பத்தை அழைத்துக் கொண்டு மும்பையில் செட்டில் ஆகி இருக்கும் ஜெயம் ரவியிடம் கதை சொல்ல வேண்டும் என்றால் மும்பைக்கு தான் செல்ல வேண்டுமாம்.

இதையும் படிங்க: அஜித், விஜய் பரவாயில்லை.. ஆனா சூர்யாவை சமாளிக்கிறது கஷ்டமப்பா… இயக்குனருக்கே அல்லுவிட்ருச்சாம்!..

தமிழில் சில காலமாக அவர் நடிப்பில் வெளியான சில படங்கள் தோல்வியை தழுவியது. இதைத்தொடர்ந்து அவரும் பாலிவுட்டில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறாராம். பொன்னியின் செல்வன் வெற்றியை தொடர்ந்து ஹிந்தியில் அவருக்கு சிலர் கதை சொல்லி இருப்பதாகவும் அது குறித்த பேச்சுவார்த்தையில் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

ரவியின் நடிப்பில் தற்போது காதலிக்க நேரமில்லை திரைப்படம் கடைசி கட்ட போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகளில் இருக்கிறது. அது மட்டுமில்லாமல், பிரதர், ஜீனி மற்றும் தனி ஒருவன் இரண்டாம் பாகம் உள்ளிட்ட படங்களை தன் கைவசம் வைத்திருக்கிறார். இதை தொடர்ந்து தன்னுடைய டைரக்ஷன் குறித்த விவாதத்தையும் ரவி மும்பையில் நடத்தி வருவதாக தகவல்கள் கசிந்து வருகிறது.

Related Articles
Next Story
Share it