மகளுக்கு நயன்தாரா பெயரை வைத்த பிரபு தேவா? இன்னும் அந்த நெனப்புல தான் இருக்கீங்களா மாஸ்டர்!

நடிகர் பிரபு தேவா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகராக இருப்பதோடு சிறந்த நடன மாஸ்டர், இயக்குனர் என பல திறமைகளை கொண்டு சினிமாவையே ஆச்சர்யப்படவைத்தவர் பிரபு தேவா. இவருக்கு மைக்கல் ஜாக்சனின் நடனத்தின் மீது ஏற்பட்ட தாக்கத்தினால் தனது சிறுவயதிலேயே யாருக்கும் தெரியாமல் அறையை பூட்டிக்கொண்டு மைக்கல் ஜாக்சனின் கேசட் போட்டு நடனமாடிக்கொண்டு இருப்பாராம். அன்று அவரது அம்மா நோட்டமிட்டு பார்த்துள்ளார். பின்னர் இவரது திறமையை கண்டு வியந்த குடும்பத்தினர் அவரை திரைப்படத்துறையில் டான்சராக அறிமுகப்படுத்தினார்களாம். முதல் […]

Update: 2023-06-21 02:17 GMT

நடிகர் பிரபு தேவா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகராக இருப்பதோடு சிறந்த நடன மாஸ்டர், இயக்குனர் என பல திறமைகளை கொண்டு சினிமாவையே ஆச்சர்யப்படவைத்தவர் பிரபு தேவா. இவருக்கு மைக்கல் ஜாக்சனின் நடனத்தின் மீது ஏற்பட்ட தாக்கத்தினால் தனது சிறுவயதிலேயே யாருக்கும் தெரியாமல் அறையை பூட்டிக்கொண்டு மைக்கல் ஜாக்சனின் கேசட் போட்டு நடனமாடிக்கொண்டு இருப்பாராம்.

அன்று அவரது அம்மா நோட்டமிட்டு பார்த்துள்ளார். பின்னர் இவரது திறமையை கண்டு வியந்த குடும்பத்தினர் அவரை திரைப்படத்துறையில் டான்சராக அறிமுகப்படுத்தினார்களாம். முதல் பாடல் அக்கினி நட்சத்திரம் படத்தில் ராஜாதி ராஜன் இந்த ராஜா பாடலுக்கு நடனமாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். தொடர்ந்து பல படங்களில் குரூப் டான்சராக இருந்துவந்த பிரபு தேவா தன்னுடன் நடனமாடிய ரமலத் என்ற இஸ்லாமிய பெண்ணை உருகி உருகி காதலித்து பெற்றோர் எதிர்ப்புகளை மீறி ரகசிய திருமணம் செய்துகொண்டார்.

தொடர்ந்து பெற்றோர்கள் அவரை விவாகரத்து செய்துவிட்டு வந்துவிடு உனக்கு சினிமாவில் இப்போதான் நல்ல வாய்ப்புகள் கிடைத்து வருகிறது வாழ்க்கையை கெடுத்துக்கொள்ளாதே என தொடர்ந்து அட்வைஸ் கொடுத்து நச்சரித்ததால் யாருக்கும் தெரியாமல் மனைவியை ரகசியமான ஒரு இடத்திற்கு கூட்டிச்சென்று அங்கு நிம்மதியாக வாழ்ந்து வந்தார்களாம்.

அதன் பின் இவர்களுக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள். அதில் ஒரு மகன் இறந்துவிட்டார். அப்போது பிரபு தேவா மிகுந்து வேதனைக்குள்ளாகினார். அதனால் மனைவியுடன் வாக்குவாதம் , சண்டை என ஏற்பட்டதால் அவரை விவாகரத்து செய்யவேண்டினார். அந்த சமயத்தில் யாரினும் அன்பு கிடைக்காத என ஏங்கிய அவருக்கு நயன்தாராவுடன் நல்ல நட்பு ஏற்பட்டு அது காதலாக மாறியது.

ஆனால் அவரது முதல் மனைவி கொடுத்த அழுத்தத்தினால் நயன்தாராவையும் விட்டெறிந்து பாலிவுட்டிற்கு சென்றார். அங்கு நடன இயக்குனராக இருந்து பின்னர் கஜினி இந்தி ரிமேக் படத்தை இயக்கி மாபெரும் ஹிட் கொடுத்தார். அதன் பிறகு மீண்டும் முழு வீச்சில் நடனம், நடிப்பு என இறங்கியவர் மூன்றாவதாக ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துக்கொண்டுள்ளார். அண்மையில் அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில் தன் மகளுக்கு "நயன்தாரா" என பெயர் வைத்திருப்பதாக சமூகவலைத்தளங்களில் செய்திகள் உலா வந்துக்கொண்டிருக்கிறது. யாரோ சிலர் கொளுத்தி போட்ட இந்த தீ யூடியூப் மற்றும் சோசியல் மீடியாவில் பரவி வருகிறது. ஆனால், இதில் துளி கூட உண்மையில்லை என்கிறார்கள் பிரபு தேவாவுக்கு நெருக்கமான சில நண்பர்கள் வட்டாரம்.

Tags:    

Similar News