Connect with us
vikram

Biggboss Tamil 7

என்ன சொன்னாலும் செஞ்சிரதுதானா? பிக்பாஸ் டைட்டில் வின்னர் விக்ரமை இப்படி ஆக்கிட்டாங்களே?

Saravana Vikram : தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த சீசனின் டைட்டில் வின்னரை யார் தட்டிச் செல்ல போகிறார்கள் என்றே தெரியவில்லை. 70 நாள்களை கடந்து விட்ட நிலையிலும் மக்களால் அதை கணிக்க முடியவில்லை.

அந்தளவுக்கு இந்த சீசனில் தான் போட்டியாளர்கள் மிகக் கடுமையாக விளையாடிக் கொண்டு வருகிறார்கள். ஒவ்வொரு வாரமும் விதவிதமான டாஸ்க்குகள் என பார்க்கும் ரசிகர்களையும் பிக்பாஸ் ஈர்த்து வருகிறது. கடந்த வாரம் புயல் காரணமாக எலிமினேஷன் இல்லை என்று அறிவித்து விட்டார்கள்.

இதையும் படிங்க: ‘அயலான்’ திரைப்படத்தில் இந்த டாப் நடிகரும் இருக்கிறாரா? தயாரிப்பு நிறுவனம் கொடுத்த திடீர் ஷாக்

அதனால் இந்த வாரம் இரண்டு அல்லது மூன்று பேர் வெளியேற வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த வார எலிமினேசனில் விஷ்ணு, நிக்‌ஷன், அர்ச்சனா, அனன்யா, கூல் சுரேஷ், தினேஷ் போன்றோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் ஒரு புரியாத புதிராகவே பார்க்கப்படுபவர் விக்ரம் சரவணன். இவர் விளையாட்டை புரிந்து விளையாடுகிறாரா? இல்லை அவர் போக்கில் விளையாடுகிறாரா? என்று தெரியவில்லை.

இதையும் படிங்க: ப்ப்பா!.. வேற லெவலில் வெறியேத்துறாரே!.. விடுதலை பட ஹீரோயினா இது?!..

பெரும்பாலும் பூர்ணிமாவை சுற்றியேதான் விக்ரமை ஆரம்பத்தில் இருந்து பார்க்க முடிகிறது. சொல்லப்போனால் பூர்ணிமா – மாயா கேங்கிற்கு செம்பு தூக்கியாகவே செயல்படுவதாக அவரை பற்றி நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

இதனால்தான் அர்ச்சனா அவரை பலிஆடு என்று சொன்னார். ஆனால் அது ஒரு பெரிய கெட்டவார்த்தை மாதிரி கமலும் அர்ச்சனாவை கிழித்து தொங்கவிட்டார். ஆனால் உண்மையிலேயே அப்படித்தான் இருப்பதாக இன்று வெளியான ஒரு வீடியோவில் தெரிகிறது.

பூர்ணிமா, மாயா இருவரும் பேசிக் கொண்டிருக்க சம்பந்தமே இல்லாமல் அருகில் விக்ரமும் உட்கார்ந்துக் கொண்டிருக்கிறார். பூர்ணிமா மாயாவிடம் ‘ஏங்க ஒரு மாதிரி இருக்குங்க. சர்க்கரை போடாமல் கோகோ மில்க் போட்டு வாங்க’ என கூறினார்.

இதையும் படிங்க: சம்பவம் லோடிங்! அடிபட்ட பாம்பு சும்மா விடுமா? வெளியான ‘ரஜினி 171’ படத்தின்புதிய அப்டேட்

உடனே மாயா ‘என்ன வேணுமா? போட்டு வரவா? ’ எனச் சொல்லிவிட்டு அருகில் விக்ரமை பார்த்து கண் காட்டுகிறார். உடனே பூர்ணிமா விக்ரமை பார்த்து ‘போடா போட்டு வாடா’ என கூறுகிறார். அதற்கு விக்ரமும் ‘என்னடா வேணும்? கோகோ மில்கா? போட்டுத்தாரேன்’என அவர் பாணியில் பேசிவிட்டு உள்ளே போகிறார்.

நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என தெரியாமலேயே மாயா – பூர்ணிமா இவர்களுக்கிடையில் சிக்கிக் கொண்டிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.

google news
Continue Reading

More in Biggboss Tamil 7

To Top