Connect with us

Cinema News

விஜயாவுக்கு பிரியாணி விருந்து வைத்த முத்து… அதுசரி இன்னைக்கு என்ன எல்லாம் சாப்டே முடிச்சிட்டீங்க!

Siragadikka Aasai: இன்றைய  எபிசோடில் மீனா சமைத்துவிட்டு எல்லாரையும் சாப்பிட அழைக்கிறார். எல்லோரும் வந்துவிட விஜயா மட்டும் எனக்கு சாப்பாடு வேண்டாம் என முரண்டு பிடிக்கிறார். ரவி வராமல் நான் பச்சை தண்ணீர் கூட குடிக்க மாட்டேன  உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன் என்கிறார்.

இதை கேட்டு எல்லோரும் அதிர்ச்சியடைகின்றனர். அண்ணாமலையிடம் நீங்க சாப்பிட்டு மாத்திரை போட்டு சந்தோஷமா இருங்க என்கிறார். இதனால் அவரும் எனக்கு சாப்பாடு வேண்டாம் என்கிறார். மனோஜ் ரோகிணியை சாப்பிடலாமா என அழைக்க ஆன்டியை சாப்பிடல எனக்கும் வேண்டாம் என்கிறார் ரோகிணி. விஜயாவை முத்து கலாய்த்து கொண்டே இருக்க ஒரு கட்டத்தில் அவர் ரூமில் சென்று அடைந்து விடுகிறார்.

இதையும் படிங்க: அஜித்தை காப்பி அடிச்சேனா? என்ன வேணுனாலும் சொல்றதா.. ஃபுல் ஸ்டாப் வைத்த ராமராஜன்

என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டே இருக்க முத்துவுக்கு ஒரு ஐடியா தோன்றி விடுகிறது. உடனே எல்லாரும் இப்படியே உக்காந்துருங்க வந்துடறேன் என கிளம்பி செல்கிறார். மனோஜ் எனக்கு பசிக்குது ரோகிணி நீயாச்சும் வாயேன் என கூப்பிட ஆன்ட்டி சாப்பிடாம நான் சாப்பிட மாட்டேன் என்கிறார்.

அடுத்ததாக ஸ்ருதிக்கு சாப்பாடு எடுத்துக் கொண்டு வருகிறார் ரவி. மேனேஜர் ஸ்ருதியிடம் சாப்பாடு வந்து விட்டதாக கூற உள்ளே வந்து பார்த்தால் ரவி இருப்பதை பார்த்து சந்தோஷமாகிவிடுகிறார். உங்க ரெஸ்டாரண்ட்ல நான் சாப்பாடு தானே ஆர்டர் பண்ணேன் செஃபை பண்ணலையே எனக் கலாய்க்கிறார்.

பின்னர் வீட்டுக்கு எப்போ போறது என கேட்க சாப்பிட்டு வீட்டுக்கு தான் போறேன் என்கிறார் ஸ்ருதி. நம்ம வீட்டுக்கு கேட்கிறேன். எல்லாரும் நம்ம இல்லாம பீல் பண்றாங்களாம். முத்து வந்து பேசிட்டு போனதாக சொல்கிறார். மீனாவும் என்னிடம் பேசியதாக ஸ்ருதி கூறி விடுகிறார். இதைத் தொடர்ந்து இருவரும் ஓரளவுக்கு அமைதியாகி சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இதையும் படிங்க: மீண்டும் வேதாளம் முருங்கமரம் ஏறுது டோய்… பாக்கியா காதல் பண்றாங்களோ!

அடுத்ததாக வீட்டில் மனோஜ் சாப்பிடாமல் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருக்க முத்து எங்கே என்கிறார் அண்ணாமலை. எங்கையாவது சாப்பிட போயிருப்பான் என்கிறார் மனோஜ். அப்போ கையில் பெரிய வாளியுடன் வருகிறார் முத்து. படிச்ச அறிவாளி நீ சொன்னது உண்மைதான் சாப்பாடு வாங்கிட்டு வந்திருக்கேன் என்கிறார்.

பின்னர் டைனிங் டேபிளில் இருந்த எல்லாவற்றையும் எடுத்துவிட்டு பெரிய இலை போட்டு பிரியாணியை மொத்தமாக கொட்டி பரிமாறுகிறார். இதன் வாசனை வீடெங்கும் பரவ விஜயாவால் அமைதியாக இருக்க முடியாமல் போகிறது. இதனுடன் இன்றைய எபிசோட் முடிந்தது..

google news
Continue Reading

More in Cinema News

To Top