Connect with us

latest news

ரோகினிக்கு தயாரான முதல் ஆப்பு!… எப்பா ஆடியன்ஸ் சந்தோஷமா உங்களுக்கு!…

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் எல்லாரும் வீட்டுக்கு வருகின்றனர். ரோகினி மாமா வந்ததை நினைத்து ரொம்ப பெருமையாக பேசிக்கொண்டு இருக்கிறார் விஜயா. எல்லாரும் ரூமுக்கு செல்ல மீனா பையுடன் உள்ள செல்ல போனவரை திட்டி போய் சமைக்க சொல்கிறார்.

கடையை மட்டும் திறந்துட்டு வந்துறேன் எனக் கூற அது என்ன பெரிய மாலா என நக்கல் பேசி போய் காபி போட சொல்கிறார். பின்னர் மனோஜ், ரோகினியை ரூமுக்கு கூப்பிட இவனுக்கு எப்பையுமே ரூம் தான் என்கிறார் முத்து. உடனே விஜயா ஏன் நீயும் உன் ரூமுல போய் நுழைஞ்சிக்கோ என நக்கல் செய்கிறார்.

இதையும் படிங்க: விருந்து வைத்து வடிவேலுவை பாராட்டிய நடிகர் திலகம்!.. அட இப்படியெல்லாம் நடந்துச்சா!…

நாங்க தான ரூம் இல்லாம இருக்கோம் என விஜயா கூற அண்ணாமலை நான் அதுக்கு ஒரு முடிவு பண்ணிருக்கேன். மாடியில் ஒரு ரூம் எடுக்க போறேன் என்கிறார். அங்க ரூம் கட்டிட்டா முத்து, மீனாவை துரத்த முடியாதே என்பதால் அப்போ பாத்துக்கலாம் என சமாளிக்கிறார்.

பார்வதி விஜயாவை பார்க்க வர தனியா போய் பேசலாம் என ஸ்ருதி ரூமுக்கு செல்ல அவர் படார் என கதவை சாத்தி விடுகிறார். ரோகினி ரூமுக்கு வர அங்கே மனோஜ் அசால்ட்டாக படுத்து இருப்பதை பார்த்து வேலைக்கு போய் இண்டர்வியூ அட்டன் செய்யிற வேலையை பாரு எனத் திட்டி கொண்டு இருக்கிறார்.

உடனே மனோஜ் ஓடி வந்து ரூமை சாத்தி விடுகிறார். பின்னர் மீனா கிச்சனில் தான் இருப்பதால் அவர்கள் ரூமுக்கு செல்ல முத்து தூங்கி கொண்டு இருந்தவர் டக்குனு எழுந்து உட்காருகிறார். தனியா பேசணும் என விஜயா கூற ஓ அவ்வளோ ஆச்சா? என நக்கலடிக்கிறார்.

பார்வதியுடன் தனியா பேசணும் எனக் கூற ஹாலில் பேசுங்கள் எனக் கடுப்படிக்கிறார். விஜயா பார்வதியை கூட்டிக்கொண்டு மாடிக்கு செல்கிறார். பின்னர் ரோகினி அப்பா சீக்கிரம் வந்துருவாரு. நிறைய காசு வரும். 3 அடுக்கு மாடி கட்டணும் என கலர் கலராக ரீல் விடுகிறார்.

இதையும் படிங்க: 33 வருஷம் கழிச்சு ரி எண்ட்ரி ஆகும் செண்பகம்! அப்ப விட்டத இப்ப பிடிப்பேன்! விஜய், அஜித் எல்லாம் ரெடியா இருங்க

ஆனால் அதுக்கு முன்னர் முத்து, மீனாவை வெளியேத்தணும் எனப் பேசிக்கொண்டு இருக்க அப்போது மீனா அங்கு வந்துவிடுகிறார். விஜயா என்ன ஒட்டுக்கேட்டியா எனக் கேட்க அந்த பழக்கம் எனக்கு இல்லை. நீங்க தானே காபி கேட்டீங்க எனக் கொடுத்துவிட்டு செல்கிறார். ரோகினி வித்யாவை பார்க்க வந்து ஊரில் நடந்ததை கூறிக்கொண்டு இருக்கிறார். எத்தனை நாளைக்கு இதை மறைக்க போற.

நாளைக்கு அப்பாவை வரச்சொல்ல சொன்னா என்ன செய்வ எனக் கேட்க அப்போ ஒரு ஆள நடிக்க வைப்பேன் என்கிறார். அந்த நேரத்தில் பிரவுன் மணி வித்யா வீட்டுக்கு வர அவரை திட்டி நீ யாரு கண்ணுலையும் படக்கூடாது என அனுப்புகிறார். அப்போ ரோகினியின் பார்லரை வாங்கிய மேடம் கார் ரிப்பேர் ஆகி அவர் வாடகை காரை அழைக்கிறார்.

அந்த கார் முத்துவுடையது. முத்து அவரை ஏற்றிக்கொண்டு சொன்ன வழியில் சென்று சரியாக ரோகினி பார்லரில் நிறுத்துகிறார். மேடம் காசு கொடுக்காமல் இறங்கி சென்றுவிட காசை வாங்க முத்து உள்ளே செல்வதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

இதையும் படிங்க: ஒரே குடும்பத்தில் இருந்து 7 நடிகர்கள்! யாரும் செய்யாத அந்த சாதனைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா?

google news
Continue Reading

More in latest news

To Top