Connect with us

latest news

மாஸ் காட்டி வைரலான மீனா..! சைடு கேப்பில் காரியத்தினை சாதிக்க திட்டம் போட்ட விஜயா.. மீண்டும் ஆரம்பித்த ஸ்ருதி..!

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் ஸ்ருதி அப்பா, அம்மாவிடம் ரவியும், ஸ்ருதியும் சந்தோஷமா தான் இருக்காங்க. நீங்க பாத்த மாப்பிள்ளையை விட ரவி ஸ்ருதியை நல்லா பாத்துகிறாரு. எங்க வீட்டில் இன்னும் அவங்களை கூப்பிடலை. இந்த நேரத்தில் அவங்க தனியா இருக்கக்கூடாது. 

நீங்களும் பெத்தவங்க. உங்களுக்கும் செய்ய கடமை இருக்கு எனக் கூறிவிட்டு செல்கிறார். இதை தொடர்ந்து ஸ்ருதியின் அம்மா நாம போய் ஸ்ருதியை பார்ப்போம் என்கிறார். வாசுதேவனோ நான் வரலை. நீயும் போகக்கூடாது. நான் போய் பிஜூ அப்பாவை பாத்துட்டு வரேன். அன்னைக்கு அவ்வளவோ பேசிட்டு செக்கெல்லாம் வாங்கிட்டு போனான் என்கிறார்.

இதையும் வாசிங்க:உன்கூட இருக்க ஒருத்தனையும் நம்பாதே!. கழுத்த அறுத்துருவானுங்க!. எம்ஜிஆரை எச்சரித்த எம்.ஆர்.ராதா

மீனா நேராக முத்து சவாரி வந்த இடத்துக்கு வருகிறார். உங்ககிட்ட எதுவும் மறைக்கக்கூடாதுனு சொன்னீங்கள. இப்போ ஒன்னு நடந்துச்சு அத சொல்லத்தான் வந்தேன் என்கிறார். ஸ்ருதியை பார்க்க போனேன் எனக் கூற நீ ஏன் போன எனக் கோபமாகிறார் முத்து. இதை தொடர்ந்து ஆசிட் விஷயத்தினை சொல்ல இன்னமும் திட்டுகிறார்.

உனக்கு எதாவது ஆச்சுனா என்ன செய்றது? இந்த நேரத்தில் செய்தியாளர்கள் கூட்டம் மீனாவை சுத்தி கொள்கின்றனர். என்னவென்று மீனாவை பேட்டி எடுக்கணும் என்கின்றனர். முத்து இவளையா ஏன் எனக் கேட்க ஸ்ருதியை காப்பாற்றிய வீடியோவை காட்டுகின்றனர்.

பின்னர் மீனாவிடம் உங்களுக்கு தைரியம் எப்படி வந்துச்சு எனக் கேட்க என் புருஷன் தான் காரணம். அவருதான் யாருக்கு எதுவும் பிரச்னைனா சண்டைக்கோழி மாதிரி வருவாரு. அவருக்கிட்ட தான் சண்டை கூட கத்துக்கிட்டேன் என்கிறார். முத்துவும் சைடில் வர இவரு தான் என் புருஷன் என்கிறார் மீனா.

இதையும் வாசிங்க:இந்திப்பாடகியையே அழ வைத்த இளையராஜாவின் இசை… அவ்ளோ உருக்கமான பாடலாம்!..

இருவரும் பேட்டி கொடுக்கின்றனர். இது வைரலாக பரவ பார்வதி, விஜயாவிடம் உன் மருமக பெரிய சாதனை பண்ணி இருக்கா என்கிறார். விஜயா, ரோகினி இப்படி செய்வானு தெரியும் எனப் பெருமை பேச, அட இல்ல நான் சொல்றது மீனாவை பத்தி என்கிறார். அவளா? என்ன செஞ்சா என்கிறார் விஜயா.

அதை தொடர்ந்து வீடியோவை காட்ட ஸ்ருதிக்கு ஒன்னும் இல்லையே என்கிறார் விஜயா. இதை வைத்து அவங்களை வீட்டுக்கு கூப்பிட்டு வந்துரலாம். நாம போய் ரவியை பார்ப்போம் எனக் கூறி இருவரும் ரவியை காண வருகின்றனர். கவலையில் உட்கார்ந்து இருக்கும் ஸ்ருதி நான் போய் ரெஸ்ட் எடுக்கிறேன் எனக் கிளம்பி விடுகிறார்.

இதை தொடர்ந்து ரவி ஹாலில் உட்கார்ந்து இருக்க அப்போ பார்வதியும், விஜயாவும் உள்ளே வருகின்றனர். ஸ்ருதி எப்படி இருக்கா எனக் கேட்க ரவி ஸ்ருதியை அழைக்கிறார். இதனால் மேலே இருந்து இறங்கி வரும் ஸ்ருதி, தலை வலி ரெஸ்ட் எடுக்கிறேன் தானே சொன்னேன். இப்போ எதுக்குடா கத்துற என்கிறார்.

இதையும் வாசிங்க: சரோஜாதேவி எடுத்த தவறான முடிவு!.. மொத்தமா மார்க்கெட் போனதுதான் மிச்சம்!…

ரவி அம்மா வந்து இருப்பதாக கூற ஸ்ருதி அமைதியாக ஹாலுக்கு வருகிறார். பார்வதி நேரா உன் காலில் தான் விழுவா, எழுந்து நின்னு என்கிறார். விஜயாவும் எழுந்து நிற்க ஸ்ருதி உட்காருங்க ஆண்ட்டி எனக் கூறி சோபாவில் கால்மேல் கால் போட்டு அமர்ந்து விடுகிறார். இதையடுத்து ரவியை காபி போட சொல்கிறார்.

பின்னர் ரவி கால் மேல் கால் போடாதே என மெசேஜ் அனுப்ப ஸ்ருதி காலை எடுத்து விடுகிறார். நம்ம வீட்டுக்கு வந்துடுங்க என ஸ்ருதியை அழைக்க முத்து இருப்பதால் வரமாட்டேன் என்கிறார். அவன் முரடன் தான். ஆனா நான் இருக்கேன் என்கிறார். இதனால் ஸ்ருதி நீங்க ஸ்வீட் ஆண்ட்டி எனக் கூறுவதுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.

google news
Continue Reading

More in latest news

To Top