Connect with us
siva

Cinema News

சிவகார்த்திகேயனை கலாய்க்க நினைத்து ரசிகர்களிடம் வாங்கி கட்டி கொண்ட நடிகர்…!

ஒரு சமயத்தில் தமிழ் சினிமாவில் ஹீரோவாக வலம் வந்தவர் தான் அந்த வாரிசு நடிகர். ஆனால் புதுமுகங்களின் வருகை காரணமாக ஒரு கட்டத்தில் அந்த நடிகருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் போகவே என்ன செய்வதென தெரியாமல் டாப் நடிகர் ஒருவரின் படத்தில் கிடைத்த வில்லன் வாய்ப்பை ஏற்று நடித்தார்.

அவரே எதிர்பார்க்காத அளவிற்கு அந்த வில்லன் கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. அதுமட்டும் இன்றி வாரிசு நடிகரின் மார்க்கெட் மீண்டும் சூடு பிடிக்க தொடங்கியது. ஆனால் தொடர்ந்து வில்லன் ரோல் மட்டுமே அவரை தேடி வந்தது. இதனால் இனி நடித்தால் ஹீரோவாக மட்டும் தான் நடிப்பேன் என வாரிசு நடிகர் மிகவும் கறாராக கூறிவிட்டார்.

sivakarthikeyan

அதேபோல் அவர் நடித்த சில படங்கள் அடுத்தடுத்து ஹிட்டானதால் தற்போது கைவசம் ஒரு சில படங்களை வைத்துள்ளார் அந்த வாரிசு நடிகர். மீண்டும் விட்டதை பிடித்த கெத்தில் இருக்கும் வாரிசு நடிகர் சமீபத்தில் தயாரிப்பாளர் ஒருவரின் இல்ல திருமண விழாவிற்கு சென்றுள்ளார். தனக்கு அங்கு பெரிய வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்த்த நடிகருக்கு ஏமாற்றமே கிடைத்தது.

ஆம் நடிகர் உள்ளே சென்ற நேரம் பார்த்து சிவகார்த்திகேயன் வெளியே வந்துள்ளார். அப்போது சிவகார்த்திகேயன் செல்ல வழி ஒதுக்கிய பாதுகாவலர்கள் கூட்டதோடு கூட்டமாக வாரிசு நடிகரையும் ஒதுக்கி விட்டார்களாம். இதை ஏற்றுக்கொள்ள முடியாத அந்த வாரிசு நடிகர், “யாரு எல்லாம் மாஸ் பண்ணுறதுன்னு ஒரு விவஸ்தை இல்லாம போச்சு. தமிழ் ஆடியன்சுக்கு தெரியும். உண்மையான திறமைக்கு ஆதரவு கொடுக்கனும்” என சிவகார்த்திகேயனை கலாய்த்து டிவீட் செய்தார்.

gossip

இதனை கண்ட ரசிகர்கள் அவர் சிவகார்த்திகேயனை தான் கலாய்க்கிறார் என்பதை புரிந்து கொண்டு தற்போது வாரிசு நடிகரை கழுவி ஊற்றி வருகின்றனர். மேலும், “நீங்கள் சொன்னாலும் சொல்லா விட்டாலும் சிவகார்த்திகேயன் திறமைசாலி தான். சும்மா இல்லை கடுமையான உழைப்பு தான் அவரை இந்த இடத்திற்கு கொண்டு வந்துள்ளது” சிவாவிற்கு ஆதரவாக பேசி வருகிறார்கள்.

விஷயம் இவருக்கு எதிராக திரும்பவே போட்ட டிவீட்டை டெலிட் செய்து விட்டு பதுங்கி விட்டாராம் வாரிசு நடிகர். எதுக்கு…?

google news
Continue Reading

More in Cinema News

To Top