Connect with us
bava

Biggboss Tamil 7

பவா வீட்டை விட்டு வெளியே போன காரணம் இந்த போட்டியாளரால்தானா? வனிதாக்கா நீங்க வேறலெவல்

Bigg Boss Season 7: விஜய் டிவியில் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் நிகழ்ச்சி. தற்போது 7 வது சீசன் நடந்து கொண்டிருக்கையில் நிகழ்ச்சி ஆரம்பமான முதலே அனைத்து போட்டியாளர்களும் தன்னுடைய திறமையை காட்டி வருகிறார்கள்.

தொட்டாலே சிக்ஸ் என்பது மாதிரி போட்டியாளர் பிரதீப் பார்க்கிறவர்களை எல்லாம் வம்பிழுத்து வேடிக்கை பார்க்கிற ஒரு கேரக்டராக பிக்பாஸ் வீட்டில் காணப்படுகிறார். இது அவர் விளையாட்டில் பயன்படுத்தும் யுத்தி எனவும் தெரிகிறது.

இதையும் படிங்க: 40 வருஷம் ஆச்சா? பிறவிப் பயனை அடைந்த சஞ்சய் தத் – ‘லியோ’ படத்தின் மூலம் பெருமை சேர்த்த லோகேஷ்

போனவார முதல் எலிமினேஷனில் முதல் ஆளாக அனன்யா வெளியேறினார். அவரை தொடர்ந்து பவா செல்லத்துரையும் தாமாக முன்வந்து வீட்டை விட்டு வெளியேறுவதாக அறிவித்து இரவோடு இரவாக வெளியேறினார். அது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ப்தியை ஏற்படுத்தியது.

ஏனெனில் ஞாயிற்று கிழமை கமல் ஷோவில் சீக்கிரம் நான் போக மாட்டேன் என்று சொன்ன பவா திடீரென்று வெளியேற்றப்பட்டதற்கான காரணம் என்ன என மக்கள் ஆராய ஆரம்பித்தனர். இந்த நிலையில் நடிகை வனிதா சில தகவல்களை கூறினார்.

இதையும் படிங்க: விஜய் காப்பி அடிக்கும் அந்த நடிகரே செஞ்சிருக்காரு… அப்போ இந்த விஷயத்துலையும் செய்றது தானே சரி..!

அதாவது தனக்கு உண்டான மன நிலைதான் பவாவுக்கும் வந்திருக்கும் என நினைப்பதாக கூறினார். அதாவது பிக்பாஸ் அல்டிமேட்டில் வனிதாவும் ஒரு மெண்டல் பிரச்சினைகளால் திடீரென வீட்டில் இருந்து வெளியேறினார். அதே போல்தான் பவாவுக்கும் எதாவது ஒரு வகையில் மன அழுத்தம் ஏற்பட்டிருக்கலாம் என கூறினார்.

மேலும் அவர் எடுத்த  முடிவு சரியானது என்றும் உடல் நலத்திற்காகவும் அவர் வெளியேறுவது தான் சரி என வனிதா கூறினார். அதுமட்டுமில்லாமல் இந்த ஒரு வாரத்தில் பவாவின் முற்போக்கு சிந்தனை என்னை மிகவும் கவர்ந்தது என்றும் கூறினார்.

இதையும் படிங்க: ஜூம் பண்ணி பாத்தா உறைஞ்சி போய்டுவ!.. கையை தூக்கி கண்டதையும் காட்டும் சமந்தா!…

ஏனெனில் பழமையை மட்டும் பேசாமல் இன்றைய தலைமுறையினருக்கு ஏற்ற வகையில் பவா இருந்தது ஒரு வகையில் பார்ப்பதற்கு நன்றாக இருந்தது என கூறினார். ஆனால் அவரால் விசித்ராவுடன் இணக்கம் ஆகவே முடியாது, ஒரு குகையில் இருந்து வந்த மனிதராகத்தான் விசித்ரா இருக்கிறார்.

இன்றைய காலகட்டத்திற்கு செட் ஆகாத ஒரு வித மனநிலையில் இருப்பவர் விசித்ரா. அது பவா கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அதனால் பவாவை கொஞ்சம் காயப்படுத்தியது. அதனால் தான் இந்த சூழ்நிலையில் பவா எடுத்தது சரியான முடிவு என வனிதா கூறினார்.

google news
Continue Reading

More in Biggboss Tamil 7

To Top