Connect with us

Cinema News

சிறகடிக்க ஆசை.. கடன்காரனான மனோஜ்… விஜயாவை ரவுண்ட் கட்ட போகும் மூன்றாவது மருமகள்..!

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் பார்க்கில் முத்து அண்ணாமலையை தேடி கொண்டு இருக்கிறார். அவரிடம் இருந்து தப்பிக்கும் மனோஜ் பிச்சைக்காரன் வேடம் போட்டு தப்பிக்கிறார். அவருக்கு 5 ரூபாய் போட்டு விட்டு கிளம்பி விடுகிறார். இந்த மாத சம்பளத்தினை கொடுக்க வேண்டும் என்பதால் மனோஜ் பார்க்கில் இருக்கும் நண்பரிடம் கடன் வாங்கிறார்.

அவரோ பத்திரத்தில் கடன் வாங்கி கொண்டு ஆதாரை எடுத்து கொண்டு 20 ஆயிரம் கொடுத்து விடுகிறார். அதே நேரத்தில் வீட்டுக்கு வரும் ஸ்ருதி, பிஜூவை திருமணம் செய்து கொள்ள சம்மதம் என பொய் கூறுகிறார். தன் ரூமுக்கு சென்று ரவியுடன் பேசிக்கொண்டு இருக்கிறார். 

இதையும் படிங்க: விஜய்க்கு செக் வைக்க அந்த படத்தை களத்தில் இறக்கும் சூர்யா குடும்பம்? பப்பு வேகுமா பாஸ்?..

அவர் அம்மா யார் எனக் கேட்க பிஜூ என பொய் சொல்லி விடுகிறார். அந்த நேரத்தில் பிஜூ வீட்டுக்கு வருகிறார். மாடிக்கு செல்லும் ஸ்ருதியின் அம்மா யாருக்கிட்ட பேசிக்கிட்டு இருக்க எனக் கேட்கிறார். மாப்பிள்ளை கிட்டதான் என ஸ்ருதி கூற அப்போ கீழ இருக்கது யாரு என்கிறார் ஸ்ருதியின் அம்மா. உடனே போனை பிடுங்கி ரவியை திட்டி விட்டு கட் செய்கிறார்.

அப்போ ஸ்ருதி ரவியுடன் தான் பேசிக்கொண்டு இருக்கிறார் என்பதை புரிந்து கொண்டு அவரை வேறு ஒரு ரூமில் போட்டு அடைத்து விடுகிறார். பிறகு தான் மறைத்து வைத்து இருந்த வேறொரு போனை எடுத்து ரவிக்கு சீக்கிரம் கல்யாணம் செய்துக்கலாம் ஏற்பாடு செய்யணும் எனக் கூறுகிறார். ரவியும் அதுக்கு ஓகே சொல்லி விடுகிறார். அடுத்து அண்ணாமலையை தனியாக சந்திக்க வருகிறார் ஸ்ருதியின் அப்பா.

இதையும் படிங்க: விஜய் மிஸ் பண்ணத தட்டி தூக்கும் ரஜினி!.. தலைவர் 171-ல் பென்ச் மார்க் கிரியேட் பண்ணும் சூப்பர் ஸ்டார்..

ரவியை என் பொண்ணை பார்க்க வர வேண்டாம்னு சொல்லி கண்டிச்சு வைங்க என ஸ்ருதியின் அப்பா அண்ணாமலையிடம் கூறுகிறார். அதை உங்க பெண்ணிடமே சொல்லுங்களேன் என அண்ணாமலையும் பதிலடி கொடுக்கிறார். அவ நாங்க சொன்னா கேட்கமாட்டா. அதற்கு அண்ணாமலை ஆனா என் பையன் என்னோட பேச்சை தட்ட மாட்டான் என்கிறார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top