Connect with us
anjali

Cinema History

முத்தக்காட்சிதானே சும்மா நடி! இப்படியும் ஒரு கணவரா? போராடி நடித்த அந்த நடிகை யார் தெரியுமா?

Actress Anjali Devi:  சினிமாவை பொறுத்தவரைக்கும் இப்பொழுது முத்தக்காட்சி என்பது சர்வ சாதாரணமாகி விட்டது. நடிகர்களை விட நடிகைகள் முத்தக் காட்சியில் இறங்கி நடிக்க தயாராகி விட்டனர். ஆனால் அந்த காலத்தில் முத்தக் காட்சியில் நடிக்க நடிகைகள் எவ்வாறு தயங்கினார்கள் என்பதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை எடுத்துக் கூறினார் சினிமா தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன்.

பழம்பெரும் நடிகையான அஞ்சலி தேவி நல்ல அழகும் திறமையும் வாய்ந்த நடிகையாக அந்த காலத்தில் அறியப்பட்டவர். அவர் நடித்த படம் மோகினி. அந்தப் படத்தின் இயக்குனர் புல்லையா அஞ்சலி தேவியிடம் வந்து கதைப்படி உன்னருகில் ராஜா வருவார்.

இதையும் படிங்க: நாளைக்கு உன்ன கல்யாணம் பன்றேன்!.. சரோஜாதேவியை அதிரவைத்த சின்னப்பா தேவர்…

வந்து உன்னை கட்டியணைத்து முத்தமிடுவது போன்ற சீன் என சொன்னாராம். அதற்கு அஞ்சலி தேவி ‘முத்தக்காட்சியில் எல்லாம் என்னால் நடிக்க முடியாது. எனக்கு குழந்தைகள் இருக்கிறது. அப்படியெல்லாம் என்னால் நடிக்க முடியாது’ என கூறினார்.

ஆனால் புல்லையாவோ நீ நினைக்கிற மாதிரி இருக்காது. நடித்தால் போதும் என்று பல முறை சொல்லியும் அடம்பிடித்தாராம் அஞ்சலி தேவி. உடனே இயக்குனர் புல்லையா அங்கு இருந்த அஞ்சலி தேவியின் கணவரான ஆதி நாராயண ராவிடம் நிலைமையை சொல்லி கொஞ்சம் எடுத்துச் சொல்லுங்கள் என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: வெளியேறுகிறாரா ஜோவிகா! அனல்பறக்கும் விவாதத்தால் எழுந்த சர்ச்சை – பிக்பாஸில் நாளை நடக்கப் போகும் சம்பவம்

அதனை அடுத்து ஆதி  நாராயணராவும் நேராக அஞ்சலி தேவியிடம் வந்து ‘முத்தக்காட்சி என்பது நீ நினைக்கிறா மாதிரி எல்லாம் இருக்காது. சும்மா ஹீரோ அருகில் நின்றால் போதும். அப்படியே அவர்கள் மாற்றி எடுத்துக் கொள்ளுவார்கள்’ என்று சொல்லி புரியவைத்தாராம்.

கணவர் சொன்ன பிறகுதான் அஞ்சலி தேவி அந்த காட்சியிலேயே நடிக்க சென்றாராம். முத்தக்காட்சி என்றால் சர்வ சாதாரணமாக போன இந்த தமிழ் சினிமாவில் அந்த கால நடிகைகள் எப்படி தயங்கியிருக்கிறார்கள் என்று இந்த சம்பவத்தில் இருந்தே தெரிகிறது.

இதையும் படிங்க: அனிமல் விமர்சனம்: ரன்பீர் கபூரின் அசுரத்தனமான நடிப்பு!.. அதை மட்டும் சரி செஞ்சிருக்கலாம் சந்தீப் ரெட்டி!

 

google news
Continue Reading

More in Cinema History

To Top