கோலிவுட்டில் விநியோகஸ்தராக வலம் வந்த ராஜ்கிரண் ராமராஜனை வைத்து இரண்டு திரைப்படங்களை தயாரித்தார்.. மூன்றாவதாக கஸ்தூரி ராஜா இயக்கத்தில் என் ராசாவின் மனசிலே படத்தை எடுக்க திட்டமிட்டார். ஆனால், ராமராஜன் நடிக்காததால் அவரே ஹீரோவாக நடிக்கவும் முடிவெடுத்தார். இது தொடர்பாக ராஜ்கிரண் இளையராஜாவிடம் பேசியபோது ‘உனக்கு எதற்கு இந்த வேலை.. வேற யாராவது வச்சி எடு’ என்று சொல்லி அனுப்பிவிட்டாராம்.
அதிர்ச்சியான ராஜ்கிரன் இளையராஜாவின் குரு ஜி.கே வெங்கடேசிடம் சென்று இதுபற்றி சொல்லியிருக்கிறார். அப்போது அவர் ‘நீ படத்தை எடுத்து முடி.. இளையராஜாகிட்ட கடைசியா சொல்லிக்கலாம்’ என சொல்ல அவர் கொடுத்த தைரியத்தில் முழு படத்தையும் எடுத்து முடித்து விட்டார் ராஜ்கிரண்..
நான்கு மாதங்களுக்குபின் ராஜ்கிரண் இளையராஜாவை சந்தித்த போது ‘என்னாச்சி?. படத்தை பத்தி பேசிட்டு போனியே’ என கேட்டிருக்கிறார். ‘படத்தை எடுத்து முடிச்சிட்டேன்’ என ராஜ்கிரண் சொல்ல ஷாக்கான இளையராஜா ‘படத்தை எடுத்துட்டியா?.. யாரு ஹீரோ?’ என்று கேட்டிருக்கிறார்.. ‘நான்தான்’ என ராஜ்கிரண் சொல்லிவிட்டு, படத்தை நீங்கள் பார்க்க வேண்டும்’ என சொல்ல படத்தை பார்த்திருக்கிறார் இளையராஜா.

படத்தை பார்த்து விட்டு இந்த படத்தை பாவலர் கிரியேசன்ஸ் (இளையராஜாவின் தயாரிப்பு நிறுவனம்) பேனரில் வெளியிடுவோம்.. இந்த படத்திற்கு பாடல்கள் தேவையில்லை.. பாடல்கள் வைத்தால் அது படத்தை கெடுத்து விடும்’ என்று இளையராஜா கூறியிருக்கிறார். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ராஜ்கிரண் ‘உங்கள் மியூசிக்தான் இந்த படத்துக்கு உயிர்னு நினைச்சிட்டுருக்கேன்’ என்று சொல்ல வேறு வழியில்லாமல் ராஜ்கிரண் அந்த படத்திற்கு பாடல்களை போட்டு கொடுத்திருக்கிறார்..
அப்படி வெளியான என் ராசாவின் மனசிலே திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது.. அதோடு கோலிவுட்டில் ராஜ்கிரண் ஒரு முக்கிய நடிகராகவும் மாறினார். சில படங்களில் ஹீரோவாக நடித்த ராஜ்கிரண் ஒரு கட்டத்தில் குணச்சித்திர நடிகராக மாறியது குறிப்பிடத்தக்கது.

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
மின் அஞ்சல் முகவரி mugas123@gmail.com
