Connect with us
vijayakanth

Cinema News

இரவோடு இரவாக கேப்டன் செய்த வேலை!.. ஆடிப்போய் சத்தியராஜ் செய்த காரியம்…

Vijayakanth :விஜயகாந்த் என்றாலே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது அவர் மற்றவர்களுக்கு உதவும் அந்த ஈகை குணம்தான். தன்னை தேடி வந்து உதவியர்களுக்கு உதவுவது ஒருபக்கம் எனில், ஒருவருக்கு ஒரு பிரச்சனை எனில் அவராகவே வழிய சென்று உதவி செய்வது மற்றொரு குணம்.

உதாரணத்திற்கு ஒன்றை சொல்லலாம். எதேச்சையாக தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜா வீட்டிக்கு போன விஜயகாந்த் அங்கே அழுது கொண்டிருந்த அவரின் மகளை பார்க்க, மருத்துவம் படிக்க முடியாமல் இருப்பதை தெரிந்துகொண்டு ஒரேநாளில் அதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்தார். இப்போது தனுஷின் அக்கா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணராக இருக்கிறார்.

இதையும் படிங்க:  விஜயகாந்த் சமாதியில் மண்டிப்போட்டு வணங்கிய ஜெயம் ரவி.. கண்ணெல்லாம் கலங்கிடுச்சு.. அடுத்து யாரு?

இப்படி தெரிந்து சில என்றால் தெரியாமல் திரையுலகை சேர்ந்த பலருக்கும் விஜயகாந்த் உதவியிருக்கிறார். அதை எல்லாம் அவர் எங்கேயும் வெளியே சொல்லிக்கொண்டதில்லை. பல நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர் என பலருக்கும் அவர் உதவியிருக்கிறார். அதில் கொஞ்சம் மட்டுமே வெளியே தெரிந்திருக்கும்.

ஒருமுறை சத்தியராஜ் ஒரு தகவலை சொல்லியிருந்தார். ஏவிஎம் ஸ்டுடியோவில் படப்பிடிப்பில் இருந்தேன். அருகில் விஜயகாந்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. கும்பகோணத்தில் பள்ளியில் தீப்பிடித்து சில குழந்தைகள் இறந்த செய்தி அவரை வாட்டிக்கொண்டிருந்தது. அன்று மாலை 6 மணி படப்பிடிப்பு முடிந்தபின் நான் வீட்டிற்கு போய்விட்டேன்.

இதையும் படிங்க: விஜயகாந்த் மகன் திருமணம் நின்னு போனதுக்கு காரணம் இதுதான்!.. பயில்வான் ரங்கநாதன் சொல்லும் பகீர் தகவல்…

ஆனால், விஜயகாந்த் படப்பிடிப்பை முடித்தபின் கும்பகோணம் சென்று அங்கு இறந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ரூ.10 லட்சத்தை நிதியாக கொடுத்துவிட்டு இரவோடு இரவாக சென்னை வந்துவிட்டார். அடுத்தநாள் காலை 7 மணிக்கு வழக்கம்போல் அவர் படப்பிடிப்புக்கும் வந்துவிட்டார்.

அவர் அப்படி செய்ததை பார்த்துவிட்டு வேறு வழியில்லாமல் நாங்களும் நிதி கொடுத்தோம். உதவி செய்வத்கை சொல்லிக்கொடுத்தவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் எனில், அள்ளி கொடுப்பதை எங்களுக்கெல்லாம் சொல்லி கொடுத்தவர் விஜயகாந்துதான் என சத்தியராஜ் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: நான் சாகுறதுதான் சரி!. பிரேமலதாவிடமே சொன்ன விஜயகாந்த்… இது எப்ப நடந்தது தெரியுமா?!..

google news
Continue Reading

More in Cinema News

To Top