தக் லைஃப் படம் ரிலீஸ் ஆகாது!.. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த கமல்ஹாசன்!...

By :  MURUGAN
Published On 2025-06-03 16:56 IST   |   Updated On 2025-06-03 16:56:00 IST

Thuglife: தக் லைப் பட புரமோஷனில் கலந்துகொள்ள கன்னட நடிகர் சிவ்ராஜ் குமார் வந்திருந்தபோது அவரை பற்றி பேசிய கமல் ‘நாங்கள் எல்லோரும் ஒன்றுதான். தமிழில் இருந்துதான் கன்னட மொழி உருவானது’ என பேச சில கன்னட அமைப்புகள் இதை கையில் எடுத்து ‘கமல் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் கர்நாடகாவில் தக் லைஃப் படம் ரிலீஸ் ஆகாது’ என தெரிவித்தனர்.

ஆனால், கமலோ ‘நான் அன்பாகவே சொன்னேன். அன்பு மன்னிப்பு கேட்காது. நான் சொன்னதில் எந்த தவறும் இல்லை. மொழி ஆய்வாளர்கள் சொன்னதையே நான் சொன்னேன்’ என சொல்ல கன்னட அமைப்புகளுக்கும் மேலும் கோபம் அதிகரித்தது. இன்னும் 2 நாட்கள் கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என கெடு விதித்தார்கள்.

எனவே, கமல் கர்நாடக உயர்நீதிமன்றத்தை நாடினார். ஆனால், வழக்கை விசாரித்த நீதிபதி ‘நீங்கள் என்ன வரலாற்று ஆய்வாளரா?. மொழி வல்லுனரா?. நீங்கள் பேசியதற்கு என்ன ஆதாரம்?. நீங்கள் மன்னிப்பு கேட்டிருந்தால் இந்த விவகாரம் சுலபமாக முடிந்திருக்கும். உங்களால் மன்னிப்பு கேட்க முடியாதா?’ என கேள்வி எழுப்பினார். நீதிபதியின் இந்த கேள்வி கருத்து சுதந்திரத்திற்கு எதிராக இருப்பதாக சமூகவலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்தனர்.


இன்று மதியம் 2.30 மணி வரைக்கும் நீதிமன்றம் நேரம் கொடுக்க கமல் கர்நாடக வர்த்தக சபைக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், கன்னட மொழி பற்றி நான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. கன்னட மொழியின் மீதும், அதன் பாரம்பரியம் மீதும் எனக்கு மரியாதை உண்டு. எல்லோரும் ஒன்று என சொல்வதற்காகவே நான் அப்படி பேசினேன்’ என அதில் குறிப்பிட்டிருந்தார்.

கமலின் இந்த விளக்க கடிதம் நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்டது. அதைப்படித்துப்பார்த்த நீதிபதி ‘இதில் மன்னிப்பு என்கிற வார்த்தையே இல்லையே. மன்னிப்பு கேட்பதில் கமலுக்கு என்ன ஈகோ?’ என மீண்டும் கேள்வி எழுப்பியது. இதைத்தொடர்ந்து ‘தக் லைஃப் படம் வருகிற 5ம் தேதி கர்நாடகாவில் ரிலீஸ் ஆகாது. ஒரு வார கால அவகாசம் கேட்டிருக்கிறோம். கர்நாடக திரைப்பட சம்மேளத்துடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருக்கிறோம்’ கமல் தரப்பு வழக்கறிஞர் செய்தியாளர்களிடம் கூறினார்.

Tags:    

Similar News