நேத்து வந்த அழகிய லைலாவுக்கு இருக்குற அறிவு!.. பல வருஷம் சம்பாதித்த அழகூரில் பூத்தவளேக்கு இல்லையே?

By :  Akhilan
Update:2025-03-10 17:59 IST

Nikhila Vimal: தன்னுடைய சினிமா உலகத்தை குறித்து வாய்ப்புக்காக அண்டை மாநிலத்தில் அசிங்கமாக பேசும் ஜோதிகாவை விட எங்கும் விட்டுக்கொடுக்காமல் பேசும் நிகிலா விமலுக்கு அப்ளாஸ் குவிந்துள்ளது.

பொதுவாக நடிகைகள் தங்களுடைய வாய்ப்புக்காக அவ்வப்போது திரித்து பேசுவது வழக்கம் தான். எந்த மொழியில் வாய்ப்பு வேணுமோ அதை தூக்கி பேசிவிடுவார்கள். ஆனால் பிரபல நடிகைகள் இதில் கொஞ்சம் நிதானமாக தான் இருப்பார்கள்.

அந்த வகையில் எங்கு சென்றாலும் தங்களுடைய சொந்த மொழியை விட்டுக் கொடுக்காமல் பேசுவார்கள். ஆனால் ஜோதிகா சமீபகாலமாகவே பாலிவுட்டில் கவனம் செலுத்தி வருகிறார். அங்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக அங்குள்ள பேட்டிகளில் தமிழ் மொழியை மட்டம் தட்டி பேசி வருகிறார். 

 

சமீபத்தில் ஒரு பேட்டியில் ஹீரோயின் ஒரு ஹீரோவை புகழ்ந்து பாட மட்டுமே இருப்பார்கள். நான் 10 வருட சினிமா வாழ்க்கைக்கு பின்னர் எல்லா ஹீரோக்களுடன் நடித்த பின்னர் அப்படி கதை தேர்வு செய்வதை நிறுத்திவிட்டேன் எனக் குறிப்பிட்டு இருந்தார்.

இது இணையத்தில் பேசு பொருளானது. பல வருடமாக கோலிவுட்டில் கொடி கட்டி பறந்தவர் ஜோதிகா. அவருக்கு சந்திரமுகி போன்று படத்தினை கொடுத்த திரையுலகத்தினை அசிங்கப்படுத்தலாமா எனவும் பலரும் கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில் நடிகை நிகிலா விமலால் மீண்டும் தற்போது ஜோதிகா அடி வாங்கி வருகிறார். அவர் தன்னுடைய சமீபத்திய பேட்டி ஒன்றில் தமிழ் மற்றும் மலையாள உலகின் வித்தியாசம் குறித்து கேட்ட போது தமிழில் சம்பளம் நன்றாக இருக்கும் என்றார்.

மேலும் ஹீரோயின் வொர்ஷிப் என்ற கேட்ட போது எங்க ஊரில் யாரையுமே வொர்ஷிப் அதாவது ரொம்ப அதீதமாக வழிபாடு எல்லாம் செய்யவே மாட்டார்கள் என பெருமையாக சொல்லி இருக்கிறார். அவர் மற்ற மொழிகளில் வாய்ப்பு கிடைத்தாலும் தன் மொழியை குறிப்பிடுவதில் கூட அத்தனை பிரியம் காட்டுகிறார்.

ஆனால் தன்னை வளர்த்துவிட்ட ஒரு திரையுலகத்தினை இத்தனை பிரபல நடிகை இப்படி பேசு வருகிறாரே என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

Tags:    

Similar News