நெல்சனுக்கு ஒரு நியாயம்!.. மணி சாருக்கு நியாயமா?!. ரஜினி இப்படி செய்யலாமா?!...
Thug life: சினிமாவில் வியாபாரம் என்பது ஓடும் குதிரையில் மட்டுமே பணம் செலுத்தும் குதிரை ரேஸ் மாதிரிதான். எவ்வளவு ஓடி ஜெயித்திருந்தாலும் பழைய குதிரை மீது பெட் கட்ட மாட்டார்கள். நேற்று அது வெற்றி பெற்றதா? என்பதுதான் கேள்வி. எவ்வளவு ஹிட்களை கொடுத்த இயக்குனராக இருந்தாலும் சரி, இப்போது அவரின் படங்கள் ஓடுகிறதா?.. குறிப்பாக அவரின் கடைசிப்படம் ஓடியதா? என்பதை வைத்தே முடிவு செய்வார்கள்.
ஒரு நடிகரோ அல்லது இயக்குனரோ சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தால் அவரை வைத்து படமெடுக்க பல தயாரிப்பாளர்கள் முன் வருவர்கள். அதே நடிகரோ, இயக்குனரோ தோல்விப்படத்தை கொடுத்தால் யாரும் கண்டுகொள்ளமாட்டார்கள். அதேபோல், ஒரு இயக்குனர் தோல்விப்படம் கொடுத்தால் அவரின் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட நடிகர்களும் கழண்டுவிடுவாரக்ள். அவர்கள் போன் செய்தால் கூட எடுக்கமாட்டார்கள். இது சினிமாவில் பல வருடங்களாக இருக்கும் கதைதான்.
ஆனால், மணிரத்னம் போன்ற இயக்குனர்கள் இதில் விதிவிலக்கு. இவர் பெரும்பாலும் சொந்த தயாரிப்பிலேயே படம் எடுப்பார். இவர் கூப்பிட்டால் எந்த நடிகர்களும் குறைந்த சம்பளத்திலேயே நடிக்க முன்வருவார்கள். எனவே, குறைவான பட்ஜெட்டில் படமெடுத்து லாபம் பார்த்துவிடுவார். அதனால்தான் அவரின் வண்டியும் ஓடிக்கொண்டிருக்கிறது.
இப்போது தக் லைப் படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸோடு இணைந்து உருவாக்கியிருக்கிறார். ஆனால், இந்த படம் ஏனோ ரசிகர்களை கவராமல் போய்விட்டது. படத்தின் கதை, திரைக்கதை ரசிகர்களை திருப்திபடுத்தவில்லை. எனவே, படம் நெகட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. கண்டிப்பாக இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாது என்றே கணிக்கப்படுகிறது.
பொன்னியின் செல்வன் விழாவில் கலந்துகொண்ட ரஜினி மணிரத்னத்தின் இயக்கத்தில் மீண்டும் நடிக்க ஆர்வம் காட்டினார். ரஜினிக்காக மணிரத்னம் ஒரு கதையை உருவாக்கியதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், தக் லைப் ரிசல்ட்டால் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க ரஜினி ஆர்வம் காட்டமாட்டார் என சொல்கிறார்கள்.
அதேநேரம், விஜயை வைத்து நெல்சன் எடுத்த பீஸ்ட் படம் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றபோதும் அவரின் இயக்கத்தில் நடிக்க முன்வந்தார் ரஜினி. ஜெயிலர் விழாவில் பேசிய ரஜினி ‘போன படம் பற்றி யோசிக்காதீர்கள். இந்த படத்தை சிறப்பாக செய்யுங்கள்’ என நெல்சனிடம் சொன்னதாக கூறினார். ஆனால், ‘இந்த நியாயம் மணிரத்னத்திற்கு பொருந்ததா?’ என்கிற கேள்வி ரசிகர்களுக்கு எழுந்திருக்கிறது.