காஞ்சனா-3 பட நடிகை தற்கொலை...மர்ம முறையில் மரணம்....

காஞ்சனா-3 பட நடிகை தற்கொலை...மர்ம முறையில் மரணம்....

;

By :  adminram
Published On 2021-08-23 08:41 IST   |   Updated On 2021-08-23 08:41:00 IST

ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய திரைப்படம் ‘காஞ்சனா 3’. ஏற்கனவே காஞ்சனா 2 பாகங்கள் வெளியாகி வெற்றி பெற்றிருந்த நிலையில், இது 3வது பாகமாக 2019ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வெற்றி பெற்றது.

இப்படத்தில் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக ரஷ்ய நடிகையும் மாடலுமான அலெக்ஸாண்ட்ரா ஜாவி ‘ரோஸி’ என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படத்தின் பிளாஷ்பேக் காட்சிகளில் இவர் வருவார். இவர் கோவாவில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தார். அவருக்கு வயது 24. இவர் தனது தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காஞ்சனா 3 படம் வெளியான அதே ஆண்டு சென்னையை சார்ந்த ஒரு புகைப்பட கலைஞர் தனக்கு பாலியல் தொல்லை தருவதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பின் அந்த புகைப்பட கலைஞர் கைது செய்யப்பட்டார். கோவாவில் இவர் தனது காதலருடன் வசித்து வந்தார். கடந்த 19ம் தேதி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சமீபத்தில் இவரும் அவரின் காதலரும் பிரிந்துவிட்டனர். அந்த சோகத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

Similar News