Siragadikka Aasai: மனோஜை குழப்பும் ரோகிணி… முத்துவால் மனம் உருகும் விஜயா… சரி இல்லையே?
Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.
ரோகிணி பார்ட்டிக்கு போவதாக கிளம்ப எங்கே செல்கிறாய் எனக் கேட்கிறார் மனோஜ். அது உனக்கு எதுக்கு எனக் கேட்க அம்மா கேட்டா சொல்லணுமே என்கிறார்.
ரொம்ப அம்மா பையனா இருக்க மனோஜ் எனக் கூறி நான் போறதை யார்கிட்டயும் சொல்ல வேண்டாம் எனச் சொல்லி ரோகிணி சென்று விடுகிறார். பிறந்தநாள் பார்ட்டிதானே எப்படி கேக் வாங்குவாள் எனக் கூறி ரோகிணியை பாலோ செய்கிறார்.
ஒரு கடையில் கேக் வாங்கிக்கொண்டு ரோகிணி செல்ல அவரை பின்பற்றி வந்த மனோஜ் அவர் சென்றதும் கடைக்கு வந்து பேசுகிறார். மறைமுகமாக பேசி ரோகிணி கேக்கில் போட்ட பெயர் மகேஷ் என்பதை தெரிந்து கொள்ள அதிர்ச்சி அடைகிறார்.
வீட்டிற்கு முத்து குடித்து விட்டு வர அதை பார்த்து விஜயா கடுப்பாகி மறுபடியும் ஆரம்பிச்சிட்டானா என்கிறார். ஆனால் முத்து தன்னுடைய அம்மா குறித்து குடித்துவிட்டு புலம்ப அதை கேட்டு விஜயா அதிர்ச்சியாகி விடுகிறார். இருந்தும் தன்னுடைய கெத்து குறையாமல் பேசுகிறார்.
முத்து தொடர்ந்து அம்மாக்காக பேசிக்கொண்டே அவரை துரத்த ஒரு கட்டத்தில் விஜயாவின் மடியில் படுத்து கொள்கிறார். ஆனால் ஒன்னும் சொல்ல முடியாமல் விஜயாவும் அமைதியாக இருந்துவிட்டு பின்னர் எழுந்து செல்கிறார். அந்த நேரத்தில் அண்ணாமலை வர முத்து குடித்தது தெரிந்து விடுகிறது.
அவரிடமும் புலம்பிக்கொண்டு இருக்கிறார் முத்து. பின்னர் காலையில் அண்ணாமலையிடம் முத்து திடீரென குடித்த விஷயம் குறித்து மீனா சொல்லிக்கொண்டு இருக்கிறார்.