Connect with us

Cinema News

அடுத்த பிரச்னை ஆன் தி வே போல.. கோபிக்கு வாய் அடங்குனா தான் ஆச்சரியம்..!

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் ஈஸ்வரி மற்றும் கோபி இருவரும் பேசிக்கொண்டு இருக்கும் போது ராதிகா ரூமுக்குள் வர பேச்சை நிறுத்தி விடுகின்றனர். அதை தொடர்ந்து கோபி ராதிகாவிடம் தண்ணி இருக்கா எனக் கேட்கிறார். ராதிகா, வெளியில் இருக்கும் என்கிறார்.

கோபி, நான் ரூமில் தண்ணி இருக்கானு தான் கேட்டேன் என்கிறார். சுத்தி பாருங்க என ராதிகா சொன்னதும் ஈஸ்வரி சண்டைக்கு வந்து விடுகிறார். அவன் பேச பேச வம்புக்கு பேசிக்கிட்டு இருக்கியா எனச் சண்டை போடுகிறார். இதனால் கோபி விடுங்க நானே போய் தண்ணி எடுத்துக்கிறேன் என்கிறார்.

இதையும் படிங்க: ரேஸில் ஜெயிப்பாரா நயன்? நாளை இத்தனை படங்களுடன் மோதும் லேடி சூப்பர் ஸ்டார் – களைகட்டும் திரையரங்கம்

கோபி சமையலறையில் போய் தண்ணி பிடித்துக்கொண்டு இருக்க அங்கு பாக்கியா இருக்கிறார். அவரை முறைத்துக்கொண்டு தண்ணி எடுத்துக்கொண்டு இருக்க கிளம்பும் பாக்கியாவை சொடுக்கிட்டு நிறுத்துகிறார். நான் இந்த வீட்டை விட்டு வெளியில் போ மாட்டேன். இங்கையே தான் இருப்பேன். உனக்கு சப்போர்ட்டா இருக்கும் எல்லாரையும் எனக்கு சப்போர்ட்டா நிறுத்துவேன்.

இத்தனை நாளா உன்னை இடியட்டா தான் நினைச்சேன். ஆனா நீ ஒரு வெஷம் என்கிறார். இதைக்கேட்ட பாக்கியா சொன்னதை செஞ்சிட்டு அப்போ பேசுங்க இந்த வீரவசனத்தை எனச் சொல்லிவிட்டு செல்கிறார். அடுத்த நாள் எழில் வாக்கிங் சென்று கொண்டு இருக்கிறார். அவரை கணேஷ் ஃபாலோ செய்கிறார். ஒரு கட்டத்தில் எழில் தன்னை யாரோ ஃபாலோ செய்வது நினைத்து திரும்பி பார்க்க கணேஷ் மறைந்து கொள்கிறார்.

பின்னர் எழிலுக்கும், இனியாவுக்கும் சாப்பாடு கட்டி தருகிறார் பாக்கியா. செழியனுக்கு ஆபிஸ் கிளம்பி செல்கிறார். அவருக்கும் பாக்கியா சாப்பாடு கட்டி தருகிறார். இனியாவும், எழிலும் அம்மாக்கு என் மேல தான் பாசம் என அன்பு சண்டை போடுகின்றனர். ஆனால் யாரும் கோபியை கண்டுக்காமல் செல்ல இதை ஈஸ்வரி கவனித்து குறை சொல்கிறார். பின்னர் ராதிகா கோபியை சாப்பிட கூப்பிடுகிறார்.

இதையும் படிங்க: ‘செந்தூரப்பாண்டி’ படத்தில் கேப்டனுக்கு பதில் நடிக்க இருந்த நடிகர்! அலைய வச்சு டிமிக்கி கொடுத்ததுதான் மிச்சம்

ஆனால் கோபி எனக்கு வேண்டாம் எனக் கூறிவிட சரி பசிக்கும் போது சாப்பிடுங்க. மதியம் எதுவும் பாத்துக்கோங்க என்கிறார். இதை கேட்ட ஈஸ்வரி அவனுக்கு சமைச்சு வக்கிறத விட உனக்கு என்ன வேலை என்கிறார். இதையே கஷ்டப்பட்டு செஞ்சேன் என்கிறார். நான் தானே கூட்டிட்டு வந்தேன். எனக்கு சமைச்சு போட தெரியும் என்கிறார். அப்போ நீங்களே சமைங்க எனக் கூறி ராதிகா சென்று விடுகிறார்.

இதை தொடர்ந்து ஈஸ்வரி கடனை கட்டி முடிச்சிட்டியா எனக் கேட்க அதெல்லாம் முடிச்சிட்டேன் எனப் பொய் சொல்லி விடுகிறார். இதை தொடர்ந்து பேங்க் ஆட்கள் வீட்டுக்கு வந்து கடனை கேட்கின்றனர். 3 நாளில் கட்டிவிட வேண்டும். இல்லை பிரச்னை செய்வோம் என மிரட்டி விட்டு செல்கின்றனர். 

கோபி செந்திலை ஹோட்டலில் சந்தித்து புலம்புகிறார். முன்னாடி பாக்கியா பிரச்னை, இப்போ ராதிகா, பாக்கியா ரெண்டு பேரும் சேர்ந்து என் தலைமேல ஏறி உட்கார்ந்து பிரச்னை செய்வதாக புலம்புவதுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.

இதையும் படிங்க: என்னம்மா அந்த இடத்துல ஆடு மேயுது!.. ஜெயம் ரவி ஹீரோயினின் ஜலபுலஜங் மேலாடை மெர்சல் பண்ணுதே!..

google news
Continue Reading

More in Cinema News

To Top