Connect with us

latest news

பாக்கியலட்சுமி: கல்யாணம் பண்ணிக்கலாமா..? செழியனுக்கு ஷாக் கொடுத்த மாலினி…

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் வீட்டுக்கு வரும் கோபி, பாக்கியா தன்னுடைய நண்பன் ஆபிஷுக்கு காண்ட்ராக்ட் எடுக்க போனா, நான் தடுத்து விட்டேன் என்பதை கூறி சந்தோஷப்படுகிறார். ஆனால் நான் அவங்க காண்ட்ராக்ட் இல்லாம காசு இல்லாம கஷ்டப்படணும்னு நினைக்கல என்கிறார் ராதிகா.

ஆனா அவங்க நம்மள சுத்தியே வராங்க எனக் கூற, இனி அவளுக்கு எந்த காண்ட்ராக்ட்டும் கிடைக்காது. அந்த பழனிச்சாமி ஹீரோ ஆகலாமுனு பாத்தான். மொத்தமா போச்சு. இனி மீண்டும் மசாலாத்தூள் எடுத்துட்டு தெரு தெருவா போக வேண்டியது தான் என்கிறார்.

இதையும் படிங்க: நம்புங்க பாஸ் நான் அன்பான இயக்குநர் தான்!.. விஜய் ரசிகர்களிடம் திடீரென மன்னிப்புக்கேட்ட நயன்தாரா கணவர்!..

அடுத்து ஜெனி வீட்டுக்கு வர ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து வருகின்றனர். ஜெனி எத்தனை நாள் ஆச்சு வீட்டுக்கு வந்தாச்சு எனக் கூறி சந்தோஷப்படுகிறார். அப்போது ஈஸ்வரி ரொம்ப சந்தோஷம் வீட்டுக்கு முத வாரிசு பெத்து கொடுத்துட்ட என சந்தோஷப்படுகிறார். இதனால் அங்கிருந்த எழில் மற்றும் அம்ருதா முகம் மாறுகிறது. உடனே சுதாரித்த பாக்கியா என்ன அத்த?

அதான் நிலா இருக்கால எனக் கூறி நிலா இறங்கி போய் குழந்தைக்கு முத்தம் வைக்கிறார். அடுத்து ரூமில் அமர்ந்து செழியனுடன் ஜெனி பேசிக்கொண்டு இருக்கிறார். அப்போது பாக்கியா ரூமுக்குள் நுழைகிறார். அந்த சமயத்தில் மாலினியிடம் இருந்து தொடர்ந்து கால் வருகிறது. யாரு என கேட்க ப்ரண்ட் எனக் கூறி சமாளிக்கிறார் செழியன். அப்போ பேசு என பாக்கியா கூறிவிடுகிறார்.

போனை எடுத்துக்கொண்டு வெளியில் வரும் செழியனிடம் மாலினி ஏன் வரவே இல்ல? நான் கஷ்டப்படுறேன் என புலம்பி தள்ளுகிறார். நான் உன்கிட்ட பேசணும் என செழியன் கூறுகிறார். உடனே மாலினி அப்போ வீட்டுக்கு வாங்க என சந்தோஷப்படுகிறார். இல்ல நாம சந்திக்கும் ஹோட்டலுக்கு வந்துட சொல்லி போனை வைக்கிறார்.

அடுத்து ஹோட்டலில் உட்கார்ந்து இருக்கும் மாலினியிடம் செழியன் இதோட எல்லாத்தையும் நிறுத்திப்போம். நான் தான் கொஞ்சம் அவசரப்பட்டு விட்டேன் எனக் கூற மாலினி அதிர்ச்சி அடைகிறார். அவ்வளவு தானா, நான் எப்படி நீங்க இல்லாம இருப்பேன் எனக் கேட்கிறார்.

இதையும் படிங்க: லியோவை மொத்தமாக கழட்டி விட்ட விஜய்?.. தனியாளாக தொண்ட தண்ணி வத்த போராடும் லோகேஷ் கனகராஜ்!..

இந்த உறவுக்கு எதிர்காலம் இல்ல என செழியன் கூற அப்போ நம்ம கல்யாணம் பண்ணிக்கலாமா என மாலினி கேட்கிறார். இதனால் செழியன் அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.

google news
Continue Reading

More in latest news

To Top