Connect with us

Cinema News

பாக்கியலட்சுமி: கேண்ட்டீனுக்கே ஓட்டிங் வைத்த ராதிகா… கணேஷிடம் சிக்கிய அம்ருதா ஆதாரம்!

Bakkiyalakshmi: பாக்கியலட்சுமி தொடரின் இன்றைய எபிசோட்டில் ராதிகா பாக்கியாவின் கேண்டீன் அக்ரிமெண்ட்டினை கேன்சல் பண்ணியாச்சு. எல்லாத்தையும் மூட்ட கட்டிட்டு இடத்தை காலி பண்ணுங்கனு கறாராக சொல்கிறார். 

பாக்கியா தனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க எனத் தொடர்ந்து கேட்கிறார். இந்த ஆபிஸில இருக்கவங்கள்ட கூட கேளுங்க என்கிறார். அவங்க வேண்டாம் சொன்னா போயிடுவீங்களா எனக் கூறுகிறார். சொல்லமாட்டாங்க என கறாராக கூறுகிறார்.

சரி அப்போ நாளைக்கு ஓட்டிங் வச்சிக்கலாம். அதுல தோத்தா நீங்க போக வேண்டியது தான் எனச் சொல்லிவிட்டு செல்கிறார். வீட்டில் அம்ருதாவுடன் வந்து பேசும் பாட்டி, ஜெனி இல்லாமல் வீடே வெறுச்சோடி இருக்கு. அவ இருந்தா எதுவும் பேசிட்டே இருப்பார் என்கிறார்.

இதையும் படிங்க:ஸ்மைலி பந்தை வைத்து இப்படியும் பயமுறுத்த முடியுமா?.. திகிலை கிளப்பிய ஜெயம் ரவியின் இறைவன் சீன்!..

இந்த சமயத்தில் அம்ருதாவிற்கு அவர் அம்மா கால் செய்து மற்ற விஷயங்களை விசாரித்துவிட்டு கணேஷ் அப்பா, அம்மாவை பற்றி கேட்கிறார். இதற்கு தள்ளி வந்து பேசும் அம்ருதா தெரிலமா, அவங்க இங்க வரதே இல்லை. நேரில போய் பார்க்கணும் என்கிறார்.

ஆனால் அம்ருதாவின் அம்மா பதறிக்கொண்டு அதெல்லாம் வேணாம். நானே பார்த்து சொல்கிறேன். நீ இப்போ இருக்க வாழ்க்கைய ஒழுங்கா பாரு என கண்டித்துவிட்டு போனை வைக்கிறார். பழனிசாமி அம்மா பாக்கியாவை வீட்டிற்கு வர சொல்லி இருப்பதாக பழனிசாமியிடம் கூறுகிறார்.

என்ன விஷயம் எனக் கேட்க அதற்குள் பாக்கியா வீட்டிற்குள் வந்து விடுகிறார். பாக்கியா முகம் சரியில்லாமல் இருக்க பழனிச்சாமி அதற்கான காரணத்தினை கேட்கிறார். கேண்ட்டீனில் நடக்கும் பிரச்னையை கூறும் பாக்கியா நாளைக்கு நடக்கும் ஓட்டிங்கில் ஜெயிச்சால் மட்டுமே நான் அங்கு இருக்கலாம் என்கிறார். நீ கண்டிப்பாக ஜெயிப்பமா மற்றத்தை அப்புறம் பேசிக்கலாம் எனச் சொல்லி பழனிசாமி அம்மா அனுப்பி வைக்கிறார்.

இதையும் படிங்க: எல்லாரையும் வச்சு செய்ற பாலாவையே கதற விட்ட சம்பவம்!… இப்படியா பழிவாங்குவீங்க!..

வீட்டில் ஈஸ்வரி, ராமமூர்த்தி, எழில், இனியா, அம்ருதா இருக்க பாக்கியா கேண்ட்டீன் விஷயத்தினை சொல்கிறார். இதனால் அவர்களுக்கு ராதிகா மீது கோபம் வருகிறது. ஓட்டிங்கில் ஜெயிக்கணும் எனக் கூற கண்டிப்பா வெற்றி உனக்கு தான். நீ தான் அந்த கேண்டின திரும்பவும் நடத்துவ என நம்பிக்கை தருகின்றனர்.

கணேஷ் வீட்டில் அவர் அம்மா, அப்பா தூங்குவதை உறுதி செய்து கொண்டு அம்ருதா குறித்து ஆதாரம் எதுவும் இருக்கா எனத் தேடுகிறார். இதில் சத்தம் கேட்க அப்பா, அம்மா இருவரும் எழுந்து வருவதற்குள் ஒரு பெட்டியில் இருந்து சில படங்களும், பேப்பர்களும் கணேஷிற்கு கிடைக்கிறது. நீ இங்க தான் அம்ருதா இருந்து இருக்க, ஏன் என்கிட்ட மறைக்கிறாங்க என கணேஷ் சொல்வதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

google news
Continue Reading

More in Cinema News

To Top