Connect with us
bayil

Cinema News

ஒன்னு கேட்டா ஒன்னு ஃப்ரீ! இமான் சிவகார்த்திகேயன் இடையே இதுதான் நடந்தது – டபுள் டிரீட் வைத்த பயில்வான்

Bayilwan ranganathan : தமிழ் சினிமாவில் இன்று பேசுபொருளாக இருப்பது இமானுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே இருக்கும் அந்த பிரச்சினைதான். திடீரென இமான் அளித்த அந்த பேட்டி ஒட்டுமொத்த திரையுலகினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அப்படி என்ன துரோகம் செய்தார் சிவகார்த்திகேயன் என்று ஒட்டுமொத்த இணையத்தையும் ரசிகர்கள் அலசி ஆராய ஆரம்பித்து விட்டார்கள். இமானின்  முதல் மனைவியை விவாகரத்து செய்ததற்கு காரணமே சிவகார்த்திகேயன் தான் என்றும் சிலர் ஒரு புரளியை கிளப்பிவிட்டார்கள்.

இதையும் படிங்க: கமல் ஆசைக்காக ஹெச்.வினோத் செய்த செயல்… அடடே என்ன பாசமா? இல்ல அடுத்த பட வாய்ப்புக்கா?

இந்த நிலையில் பயில்வான் ரெங்கநாதன் இது குறித்து ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். இமானின் முதல் மனைவி மோனிகாவை இரண்டு வருடங்களுக்கு முன்பாகவே இமான் விவாகரத்து செய்து விட்டதாகவும் இருவரும் அதற்கான காரணத்தை நீதிமன்றத்தில் கூறவில்லை என்றும் மியூட்சுவலாகவே பிரிந்து விட்டனர் என்றும் கூறினார்.

அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகளும் உள்ள நிலையில் திடீரென ஏன் இமான் இதுவரைக்கும் வாய் திறக்காமல் இன்று இதை பற்றி பேசுகிறார் என்று தெரியவில்லை. ஒரு வேளை தனது  மார்கெட் போனதால் இதன் மூலமாகவாவது பப்ளிசிட்டி கிடைக்கும் என்பதற்காக கூறினாரா இல்லையா என்று தெரியவில்லை என பயில்வான் கூறினார்.

இதையும் படிங்க: சிவகார்த்திகேயனுக்கு இது போதாத காலம்தான்! ரவுண்டு கட்டி அடிக்க தயாராகிட்டாங்க – புதுசா இன்னொரு பிரச்சினையா?

மேலும் அவர்களுக்குள் என்ன பிரச்சினை என்பதை தெளிவாக கூறினால் அடுத்தவன் வீட்டின் பெட்ரூமை எட்டிப் பார்க்கிறவன் என்ற பேர் எனக்கு கிடைக்கும். அதனால் இரண்டு உதாரணங்களுடன் இந்த விஷயத்தை தெளிவு படுத்துகிறேன். அதன் மூலம் புரிந்து கொள்ளுங்கள் என பயில்வான் கூறினார்.

அதில் ஒன்று: நடிகை கௌதமியும் கமலும் லிவிங் ரிலேஷன்சிப்பில் இருந்தார்கள். அவர்களுடன் கௌதமியின் மகளும் கமல் வீட்டில் தான் இருந்தார். கௌதமிக்காக பல நல்ல விஷயங்களை கமல் செய்திருந்தாலும் ஒரு நேரத்தில் மகளின் பாதுகாப்பு கருதி கமல் வீட்டில் இருந்து விலகினார் கௌதமி.

இதையும் படிங்க: ப்ளீஸ் விட்ருங்க!.. வீட்ல பிரச்சனை வரும்!.. இமானிடம் கெஞ்சிய சிவகார்த்திகேயன்?!..

மற்றொன்று: பிரபல பாடகர்  யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸும் ஒரு பின்னனி பாடகர். ஒரு படப்பிடிப்பிற்காக விஜய் யேசுதாஸ் தன் மனைவியை தன்னுடன் அழைத்துச் செல்ல அங்கு தனுஷின் நண்பர் ஒருவருடன் விஜய் யேசுதாஸின் மனைவிக்கு பழக்கம் ஏற்பட்டதாம். அவ்வளவுதான். அந்த நண்பர் விஜய் யேசுதாஸின் மனைவியை தன் வலையில் வீழ்த்திவிட்டாராம்.

ஆனால் இதை பற்றி விஜய் யேசுதாஸ் வாயே திறக்கவில்லை. அதனால் இந்த மாதிரி முன்னுதாரணங்களை கூறினால் ரசிகர்களுக்கும் சரி பத்திரிக்கையாளர்களுக்கும் சரி இமானுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் என்ன நடந்திருக்கும் என்பது புரியும் என பயில்வான் ரெங்கநாதன் கூறினார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top