Connect with us
vikram

Biggboss Tamil 7

ஒரு வார்த்தையால் ஒட்டுமொத்த ரசிகர்களின் வரவேற்பை பெற்ற விக்ரம்! அனல் பறக்கும் பிக்பாஸில் அடுத்த தரமான சம்பவம்

Biggboss:  நாளுக்கு நாள் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி சூடுபிடித்து வருகிறது. 18 போட்டியாளர்களுடன் களம் இறங்கிய இந்த சீசனில் முதல் ஆளாக எலிமினேஷனில் வெளியே அனுப்பப்பட்டார் அனன்யா. இந்த வார எலிமினினேஷனில் முன்மொழியப்பட்ட பட்டியலில் பிரதீப்,  மாயா, விஷ்ணு, அக்‌ஷயா, ஜோவிகா, விசித்ரா, பூர்ணிமா ஆகியோர் இடம் பிடித்திருக்கின்றனர்.

மேலும் முதல் வாரத்தில் விஜய் வர்மா கேப்டனாக இருந்து வீட்டை நல்ல படியாக கொண்டு சென்றார் என்பதே அனைவரின் கருத்தாக இருந்தது. இரண்டாம் வாரத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் விக்ரம் கேப்டனாக பொறுப்பை ஏற்றார்.

இதையும் படிங்க: அட! என்னமா அவரு சிம்பிள்ளா இருந்தா சீனை போடுவீங்களா..? ரஜினிக்கு நடந்த அவமரியாதை..!

ஆனால் கேப்டனுக்குண்டான எந்த தகுதியும் இல்லாதவராகவே வீட்டில் நடந்து கொண்டார். நேற்று கூட ஸ்மால் ஹவுஸ் வீட்டின் சமையல் அறை மிக மோசமாக இருந்தது. அதை விசித்ரா சொல்லி விக்ரம் ஸ்மால் ஹவுஸ் டீமிடம் ஒரு வேண்டுகோளாக வைத்தாரே தவிற கட்டளை இடவே இல்லை.

மேலும் அவருடைய மேற்பார்வையும் வீட்டில் உள்ள சில பேருக்கு பிடிக்காமல் தான் இருந்தது. மேலும் சமையலில் ஸ்மால் ஹவுஸ் வீட்டில் உள்ளவர்களுக்கும் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கும் இடையில் அடிக்கடி பிரச்சினைகள் வந்து கொண்டுதான் இருந்தது.

இதையும் படிங்க: ‘லால்சலாம்’ படத்தில் வேதனையை கொட்டித்தீர்த்த ரஜினி! எப்படியெல்லாம் கஷ்டப்பட்டிருக்கிறார் பாருங்க

இன்று வெளியான ப்ரோமோவில் ஸ்மால் ஹவுஸ் வீட்டில் உள்ளவர்கள் சமைக்காமல் ஸ்டிரைக்கை அறிவித்திருக்கின்றனர். ஆனால் அவர்களுக்குள் சமைத்துக் கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இதனால் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்கள் சாப்பிடாமல் பட்டினி கிடந்து மயக்கம் வரும் அளவுக்கு அந்த ப்ரோமோவில் காட்டப்படுகிறது. இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் வெற்றி பெற வேண்டும் என்பது தவறில்லை. ஆனால் அதற்காக எல்லை மீறி நடந்து கொள்வது தவறு என்று கூறிவருகிறார்கள்.

இதையும் படிங்க: சிறகடிக்க ஆசை: ஓசியில காசு கொடுத்து கடைசியில பிச்சைக்காரனா மாறிய மனோஜ்..!

இந்த போக்கை நிறுத்த வேண்டும் என்பதற்காக அந்த பிக்பாஸ் வீட்டின் கேப்டனான விக்ரம் யாரும் சமைக்க வேண்டாம். நானே எல்லா வேலைகளையும் பார்த்துக் கொள்கிறேன் என்று ஒரு கேப்டனாக கட்டளையிடுகிறேன் என்று சொல்லியிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் விக்ரமின் முடிவு ஒரு captain ஆக சரியாக உள்ளது என்றும்

இதை தான் எதிர்பார்த்தேன் கண்ணா செம்ம என்றும் கேப்டனின் தீர்ப்பு எல்லோருக்குமே நடுநிலையானது நியாயமானது என்றும் அவருக்கு ஆதரவாக கூறிவருகிறார்கள். ஆனால் இன்று நடக்கும் எபிசோடில் பிக்பாஸ் வீடு என்னாக போக போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

google news
Continue Reading

More in Biggboss Tamil 7

To Top