Connect with us

Cinema News

மொட்டை பாஸா திரும்பி வந்த ஃபேட் மேன்!.. மனைவி மகாலட்சுமி போட்ட கமெண்ட்டை பாருங்க!..

தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனை சின்னத்திரை நடிகை மகாலட்சுமி திருப்பதியில் திருமணம் செய்துக் கொண்டார். இந்த பாடிக்கு இந்த லேடியா என ஏகப்பட்ட ட்ரோல்கள் குவிந்தன. நயன்தாரா திருமணத்தை விட எங்க திருமணத்தை பத்தி தான் பலரும் பேசினர் என ரவீந்தர் ஹேப்பியானார்.

தொடர்ந்து மகாலட்சுமி தனது அன்பையும் காதலையும் பொழிந்து வந்த நிலையில், திடீரென மோசடி வழக்கில் ரவீந்தர் கைது செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ravindar

இதையும் படிங்க: அண்ணாவை விட்டு அல்லு பக்கம் போன அட்லீ… கமலை வச்சி தளபதியை தூக்கிய எச்.வினோத்!..

பிக் பாஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை விமர்சித்து வந்த ரவீந்தர் பணமோசடி செய்து விட்டதாக வழக்கு தொடரப்பட்டது. ஆனால், தன்னை ஏமாற்றி அந்த மோசடி வழக்கில் சிக்க வைத்து விட்டனர் என ஜாமினில் வெளிவந்த பின்னர் ரவீந்தர் பேட்டி கொடுத்திருந்தார்.

அந்த வழக்கு ஒரு பக்கம் நடந்துக் கொண்டிருக்க சிறைக்கு சென்று சில நாட்கள் அவதிப்பட்டு வந்த நிலையில், வெளியே தலை காட்டாமல் சில மாதங்கள் உடல் நலம் முடியாத நிலையில், படுத்த படுக்கையாக கிடந்தார் ரவிந்தர் சந்திரசேகரன்.

இதையும் படிங்க: இருந்தாலும் ஓவர் சீன் தான்!.. பிறந்தநாளை ராஷ்மிகா எங்கே கொண்டாடியிருக்காரு பாருங்க!..

சமீபத்தில், நடைபெற்ற மகாலட்சுமி பிறந்தநாள் விழாவில் கூட ரவீந்தரின் கை மட்டுமே தானோஸ் கை போல காட்டப்பட்டது. இந்நிலையில், தாடி மீசை எல்லாம் மொத்தமாக எடுத்து விட்டு திருப்பதியில் மொட்டைப் போட்டு பட்டு சட்டை பட்டு வேட்டியில் செம மாஸாக மொட்டை பாஸாக போஸ் கொடுத்துள்ளார்.

தனது கணவர் மீண்டும் சோஷியல் மீடியாவில் கம்பேக் கொடுத்ததை பார்த்த மகாலட்சுமி ”வெல்கம் பேக் மை ஹஸ்பண்ட்” என கமெண்ட் அடித்து சோஷியல் மீடியாவில் அவரை வரவேற்றுள்ளார்.

இதையும் படிங்க:அதிதி ராவ் எத்தனை நாள் அலையவிட்டார்… மேடையில் ஓபனாக சொன்ன சித்தார்த்…

google news
Continue Reading

More in Cinema News

To Top