Connect with us

Cinema News

இப்படி எல்லாரும் பாட்டு பாடிட்டு இருக்கீங்களே… கடுப்பான விஜயா, ரோகினி… நாங்களும் தான்!…

Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் எல்லாரும் சாப்பிட்டுவிட்டு பரபரப்பாக மாலை கட்டிக்கொண்டு இருக்கின்றனர். ஆனால் ஒரு கட்டத்தில் எல்லாருக்கும் டயர்டாகி விடுகிறது. இதனால் சீதா நம்ம பொங்கல், தீபாவளி நாளில் மாலை கட்ற கலைப்பு தெரியாமல் இருக்க பாட்டு பாடுவோம்ல என்கிறார்.

ஸ்ருதி நல்லா இருக்கே எனக் கூறி எப்படி எனக் கேட்க எல்லாரும் பாட்டு பாடணும். ஆனா பூ சம்மந்தப்பட்ட பாடலை தான் பாடணும் என்கிறார். இதனால் விளையாடலாம் என மீனாவை பாட சொல்கின்றனர். அவர் மல்லிகை என் மன்னன் மயங்கும் என்ற பாடலை பாடுகிறார். எல்லாரும் ஆச்சரியமாக பார்க்கின்றனர்.

இதையும் படிங்க: கேப்டனை கடைசியாக சந்தித்த போது இதைக்கேட்டேன்!.. அழுதுவிட்டார்… கண்கலங்கிய மன்சூர் அலிகான்..

இதை தொடர்ந்து முத்துவை பாட சொல்கின்றனர். அவரை தொடர்ந்து அண்ணாமலை, ரவி, விஜயா என எல்லாரும் பூ சம்மந்தப்பட்ட பாட்டை பாடுகின்றனர். விஜயா, ரோகினி, மனோஜ் தூங்கலாம் என யோசிக்க சத்தமாக இருப்பதால் தூங்காமல் இருக்கின்றனர்.

இதை தொடர்ந்து விஜயா, ரவி மற்றும் ஸ்ருதியை தூங்க சொல்ல அவர்கள் இங்க ஜாலியா இருக்கு. முடிஞ்சதும் போறோம் என்கின்றனர். இதற்கு விஜயா 500 மாலையெல்லாம் கட்ட முடியாது என்கிறார். உடனே ஸ்ருதி எதுக்கு ஆண்ட்டி நெகட்டிவா பேசுறீங்க. பாசிட்டிவா பேசுனா தான் அவங்க சந்தோஷப்படுவாங்க என்கிறார்.

மீனா எனக்கு நம்பிக்கை இருக்கு. நாங்க கட்டிடுவோம் என்கிறார். இவர்கள் சந்தோஷமாக இருப்பதை பார்த்து பார்வதி கண் கலங்குகிறார். வெளியில் மணி சத்தம் கேட்க குல்பி வாங்கலாம் என்கிறார் ஸ்ருதி. பின்னர் ரவி மற்றும் ஸ்ருதி  சென்று வாங்கி வருகின்றனர். விஜயா எதுக்கு இப்போ இதெல்லாம் என்கிறார்.

இதையும் படிங்க: ஜி.வி. பிரகாஷ் பஞ்சாயத்தை கூட்டப் போறாரு!.. தங்கலான் இயக்குநர் பா. ரஞ்சித்தின் பளிச் பேச்சு!..

ரவி அப்போ உங்களுக்கு வேண்டாமா எனக் கேட்க பரவாயில்லை. வாங்கிட்டு வந்துட்ட கொடு என வாங்கி சாப்பிடுகிறார். பின்னர் மீனா சாப்பிடாமல் இருக்க முத்துவை கொடுக்க சொல்கின்றனர். அவரும் பிரச்னையில்லை என ஊட்டிவிடுகிறார். இதனால் விஜயா கடுப்பாகிவிடுகிறார்.

தொடர்ந்து பார்வதியை அழைத்துக்கொண்டு ரூமுக்கு செல்ல விஜயா கடுப்படித்து கொண்டு இருக்கிறார். ஆனால் பார்வதி மீண்டும் கலங்கி நிற்க என்ன ஆச்சு என்கிறார் விஜயா. முத்து மற்றும் மீனாவை பார்க்கும் போது என் கணவர் நியாபகம் வந்துச்சு எனக் கூறுவதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

இதையும் படிங்க: 100 கோடி வசூல் நாயகியை தட்டித்தூக்கிய விஷ்ணு விஷால்!.. லால் சலாம் தோல்விக்கு பதிலடி கொடுப்பாரா?

google news
Continue Reading

More in Cinema News

To Top